Just In
- 32 min ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 1 hr ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 2 hrs ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
Don't Miss
- Finance இறந்தவர் திரும்பி வந்த அதிசயம்.. பில்லியனரின் தில்லாங்கடி வேலை.. காதலியுடன் ரகசிய வாழ்க்கை..!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிகரெட் குடிக்கிறதுக்கு முன்னாடி கத்திரிக்காய் சூப், பொரியல் சாப்பிட்டா என்ன நடக்கும்னு தெரியுமா?...
கத்திரிக்காயை எக்பிளான்ட் அல்லது ஆபர்ஜின் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இது உருழைக்கிழங்கு மற்றும் தக்காளி வகையை சேர்ந்தது.
கத்திரிக்காயை எக்பிளான்ட் அல்லது ஆபர்ஜின் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இது உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி வகையை சேர்ந்தது. பொதுவாக சில காய்கறிகள் கசப்பு தன்மை கொண்டது. ஆனால், அதுவே சமைத்த பின்னர் அது மென்மையானதாக மாறிவிடுகிறது. இது முட்டை வடிவில் இருப்பதால் இதை எக்பிளான்ட் என்று அழைக்கப்படுகிறது.
இதில் வைட்டமின் சி. பி6, தாதுக்கள், புரோட்டீன்ஸ், இரும்புச் சத்து உள்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளது. கத்திரிக்காய் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது. அதே சமயம் சில தீமைகளும் அதனால் ஏற்படுவது உண்டு. இந்த கட்டுரையின் மூலம் கத்திரிக்காய் மூலம் ஏற்படும் நன்மைகளையும், பக்க விளைவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
செரிமானம்
வயிறு செரிமானத்திற்கு கத்திரிக்காய் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. முறையான மற்றும் விரைந்த உணவு செரிமானத்திற்கு வழிவகுக்கும். இஞ்சி மற்றும் பெருங்காயம் பயன்படுத்தி கத்திரிக்காயை மசியலாகவோ அல்லது சூப் வைத்தோ சாப்பிட்டால் வாயு தொந்தரவுகள் நீங்கும். அஜீரணம் அல்லது இரைப்பை அலற்சி காரணமாக வயிற்றில் உருவாகும் வாயுவை ஆசனவாய் மூலம் வெளியேற்றும். மலச்சிக்கல் உருவாகாமல் தடுத்து கழிவு அகற்றுதலை எளிதாக்கிவிடும்.
புற்றுநோய்
உடலின் ஒரு பகுதியில் இயற்கைக்கு மாறாக திடீரென அதிக செல்கள் உருவாவதால் புற்று நோய் ஏற்ப டுகிறது. உயிர்கொல்லி நோயாக புற்றுநோய் உள்ளது. புற்றுநோய் பாதுகாப்புக்கு கத்திரிக்காய் உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள நார் சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்து பலவிதமான புற்றுநோய்களின் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். சாப்பாட்டுடன் கத்திரிக்காயை சேர்ந்துக் கொண்டால் புற்றுநோயை தூரத்தில் வைக்கலாம்.
உடல் எடை குறைப்பு
உடல் எடையை குறைப்பது பலருக்கும் பெரிய சவாலாக உள்ளது. நிறைவேறாத கடமைகள் தான் உடல் எடையை குறைக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது உண்மையிலேயே எளிமையான காரியமல்ல. எனினும் இதற்கு பொறுமை, உடற்பயிற்சி மற்றும் கலோரி குறைவான ஆரோக்கிய உணவு ஆகியவை அவசியம்.
உடல் எடை குறைப்புக்கு நேரடியாக பயன்படும் காய்கறிகளில் கத்திரிக்காயும் ஒன்று. 100 கிராம் கத்திரிக்காயில் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. இது அதன் மொத்த அளவில் கால் பங்காகும். இதில் உள்ள நார்ச்சத்து உங்களக்கு நீண்ட நேரத்திற்கு பசியின்றி உணரச் செய்யும். அதனால் கூடுதல் உணவு சாப்பி டுவது தவிர்க்கப்படும். அதனால் நீங்கள் எடை குறைப்புக்கு கடின முயற்சியுடன் திட்டமிட்டால் உடனடியாக கத்திரிக்காய் சாப்பிடுவதை தொடங்கிவிடுங்கள்
இதய நோயாளிகள்
ரத்த சுத்திகரிப்பு மற்றும் சுழற்சி தான் இதயம் செய்யும் முக்கிய பணிகளாகும். ரத்த ஓட்டத்திற்கு பயன்ப டும் தமனிகளில் ஏற்படும் தடங்கல்கள் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. அதனால் இதயத்தை ஆரோக்கிமாக வைத்துக் கொள்வது முக்கியமாகும். கத்திரிக்காயில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. வைட்டமின் பி6 மற்றும் ஃப்ளவனாய்ட்ஸ் ஆகியவை இதயம் சீராக வேலை செய்ய உதவுகிறது. கொழுப்புச் சத்து இதில் குறைவு. இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன் சிறந்த முறையில் செயல்படும்.
சர்க்கரை நோயாளிகள்
ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மன அழுத்தம் இதற்கு முக்கிய காரணம். சர்க்கரை நோய் என்பது பல நோய்கள் தாக்க வழிவகுத்துவிடும். அதனால் அதை கட் டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு கத்திரிக்காய் மிக நல்லதாகும். இதில் நார்ச்சத்து மற்றம் குறைவான கார்போ ஹைட்ரேட் உள்ளது. இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோயாளிகள் தங்களது தினசரி உணவில் இதை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இது சர்க்கரை அளவை குறைக்கு உதவிச் செய்யும்.
மூளைக்கு நல்லது
நரம்பியல் செயல்பாட்டிற்கு மூளை தான் மையப்பகுதி. இதயம் துடிப்பது நின்றாலும் மனிதனுக்கு உணர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மனிதனின் மூளை இறந்த பின்னர் தான் அவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. இது தான் மூளையின் முக்கியத்துவத்தை அறியச் செய்கிறது. கத்திரிக்காய் சாப்பிடுவது கூர்ந்த கவனிப்பு சக்தியை உண்டாக்கும். இது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டிய முக்கிய காய்கறியாகும். பல்வேறு செயல்பாடுகளில் அவர்கள் விரைந்து கவனம் செலுத்த இது உதவியாக இருக்கும். இது நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.
தோல் பயன்கள்
மனிதனின் வயதை அறியச் செய்வது அவனது தோற்றம் தான். இளம் வயதிலேயே சிலருக்கு தோல் சுரு க்கம் ஏற்பட்டு முதுமை தோற்றத்தை வெளிக்காட்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முழு கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் ஏற்படுதல், போலி தோற்றம் ஏற்படுதல் போன்றவை தடுக்கப்படும். இதனால் இளைமை தோற்றத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். தோல் சுருக்கம் இல்லாமல் இருக்க கத்திரிக்காயை மசித்து தோலில் தடவ வேண்டும். மேலும், கத்திரிக்காயை வெட்டி நேரடியாக முகத்தில் தடவ வேண்டும். இது பளபளப்புமிக்க தோலை உருவாக்கும். அதிகமான எண்ணெய் பசையை தோலில் இருந்து நீக்கும்.
சிகரெட்
புகைப்படிப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமாகும். அதனால் தான் இது புற்றுநோய்க்கு வழிவ குக்கிறது. இது புகையிலைக்கு அடிமை கிடையாது. ஆனால், நிகோடினுக்கு அடிமை. கத்தரிக்காயில் குறிப்பிட்ட அளவு நிகோடின் உள்ளது. அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நினைப்பவர்கள் உணவின் ஒரு பகுதியாக கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது கத்திரிக்காய் வறுவல் அல்லது சூப் குடித்து வந்தால் சிகரெட் பழக்கத்தை கைவிட பெரும் உதவியாக இருக்கும்.
தலைமுடி
மனிதனின் தோற்றத்திற்கு தலைமுடி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. சுருட்டை முடி, நீட்ட முடி, குட்டை முடி, நீள முடி என எந்த வகையான முடியாக வேண்டுமானாலும் இருக்கலாம். கத்திரிக்காயில் வைட்டமின்கள், தாது பொருட்கள் அதிகளவில் உள்ளது. இது தலை முடிக்கு மிகவும் உகந்ததாகும். இது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது நுண் குமிழ்களை வலுப்படுத்தும். முடி உதிர்வதை தடுக்கும். பொடுகு பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகள்
கர்ப்ப காலத்தில் கத்திரிக்காய் சாப்பிடுவது பல வழிகளில் நன்மையை ஏற்படுத்தும். குழந்தையின் மூளை சீரான வளர்ச்சியை அடைய இது உதவும். தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த உதவும். குழந்தையில் நோய் எதிர்ப்பு தன்மையை மேம்படுத்தும்.
எலும்புகளுக்கு நல்லது
கத்திரிக்காய் எலும்பு தேய்மானத்தை கட்டுப்படுத்தும். அவை ஆரோக்கயமாகவும், வலுவுள்ளதாகவும் இரு க்கச் செய்யும். எலும்பை வலுவுள்ளதாக ஆக்குவதற்கு கத்திரிக்காயில் உள்ள பீனோலிக் கலவை பெரும் பங்காற்றுகிறது. முதுமை பருவத்தில் எலும்புகள் பலவினமாகும். சிறிய விபத்தினால் ஏற்படும் எலும்பு காயத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். எலும்பு தேய்மானத்தை குறைக்கும்.
ரத்த சோகை
ஹீமோகுளோபின் குறைவு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. இதை குணப்படுத்த கத்திரிக்காய் பெரிதும் உதவுகிறது. ரத்த சோகை அல்லது உங்களது உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் உங்களது அன்றாட சாப்பாட்டில் கத்திரிக்காயை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் நலனை பாதிக்குமா?
எந்த பொருளையும் நீங்கள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது தீமை தான். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு என்ற பழமொழி உண்டு. கத்திரிக்காய் மூலம் பக்க விளைவுகள் ஏற்படும். கத்திரிக்காய் மூலம் உடலுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை இங்கே பார்ப்போம்.
கத்திரிக்காயின் பக்க விளைவுகள்
கத்திரிக்காய் அதிகமாக சாப்பிட்டால் மாதவிடாய் ஏற்படும். இதில் தீமை இல்லை என்றாலும், கர்ப்பிணிகள் ஆரம்பகட்டத்தில் இதை அதிகம் சாப்பிட்டால் கருகலையும் வாய்ப்பு ஏற்படும். குறிப்பிட்ட ஒரு அளவு சாப்பிடுவது என்பது கர்ப்ப காலத்தில் நன்மையை ஏற்படுத்தும். ஆனால், அதிக அளவு சாப்பிடுவது அவ்வளவு உகந்தது கிடையாது. அதனால் கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத காலத்தில் கத்திரிக்காயை அளவோடு சாப்பிட வேண்டும்.
அசிடிட்டி
அதிக அளவு கத்திரிக்காய் சாப்பிடுவது வயிற்றில் அசிடிட்டியை உருவாக்கும். அசிடிட்டி தொந்தரவு இருப்பவர்களுக்கு இது நல்ல உணவு கிடையாது. கத்தரிக்காய் சாப்பிட்டு ஒருவருக்கு அசிடிட்டி தொந்தரவு ஏற்பட்டால் அவர் உடனடியாக கத்திரிக்காய் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
அலர்ஜி
சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் நாக்கில் அரிப்பு ஏற்படும். மேலும், சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் தோலில் படை உருவாகும். இது போன்ற அலர்ஜிகள் இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடக் கூடாது. எனினும் கத்திரிக்காய் மீது பிரியம் இருந்தால் அலர்ஜி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்,.
பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து
எந்த ரசாயனமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவை தான் நமது உடல் ஏற்றுக் கொள்ளும். இதில் அதிகப்படியானால் தீமையை தான் ஏற்படுத்தும். அதுபோல் கத்திரிக்காயில் அதிக பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. கத்திரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் இந்த சத்துக்களும் அதிகமாக உடலுக்குள் செல்லும். இதனால் வயிறு கோளாறு, வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
கத்திரிக்காய் அடிமை
கத்திரிக்காயில் நிகோடின் உள்ளது. இது சிகரெட் பழக்கத்தை கைவிட உதவும். அதனால் கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அடிமைத்தனத்தை ஏற்படுத்திவிடும். புகையிலை இல்லாத நிகோடின் உடலுக்கு நன்மை தான். எனினும் அடிமைத்தனம் என்பது உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. ஒரு பொருளை கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும் என்ற நிலை வந்துவிட்டால் அதில் இருந்து விடுபவது கடினம். அதனால் கத்திரிக்காயை அளவோடு சாப்பிட வேண்டும். அதிகப்படியாக சாப்பிடக் கூடாது.
கேள்வி
இப்போது கத்திரிக்காய் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற கேள்வி எழும். இது நிச்சயம் கிடையாது. கத்தரிக்காயின் பக்க விளைவுகள் என்பது சாப்பிடுவதற்கு ஏற்றது கிடையாது என்று பொருளல்ல. இது முன்னெச்சரிக்கை தான். விழிப்புணர்வு ஏற்படுவதற்காக நன்மையோடு தீமைகளும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் கத்திரிக்காயை அளவோடு சாப்பிட்டு அதன் பயன்களை அனுபவி க்க வேண்டும்.