Just In
- just now இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 1 hr ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- 4 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 10 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
Don't Miss
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Movies பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உயர் ரத்த அழுத்தத்தைப் போக்கும் முசுமுசுக்கை கொடிகள்!! பார்த்தா யூஸ் பண்ணுங்க!!
முசுமுசுக்கை இலைகளின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையைப் படிங்க!!
வேலிகளில், சாலையோர மரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும் ஒரு கொடி வகை மூலிகை, காண்பதற்கு, கோவை இலைகள் போன்று காட்சியளிக்கும், அவை முசுமுசுக்கை கொடிகள் என்று அழைக்கப்படுகின்றன. மலர்கள் மஞ்சள் வண்ணத்தில் காணப்படும், தண்டுகள் மற்றும் இதன் காய்களில் சுணைகள் எனும் நுண்ணிய முட்கள் போன்ற நார்கள் காணப்படும். சிறிய வடிவிலான காய்கள் பழுத்தபின் சிவந்த வண்ணத்தை அடையும்.
நிலத்தில் படர்ந்தும், மரங்கள் அல்லது வீடுகளின் மேற்கூரைகள் மேல் படர்ந்து வளரும் முசுமுசுக்கை கொடியை, கிராமங்களில் பேய்ப்புடலை என்றும் அழைப்பர். முசுமுசுக்கை கொடி, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதிப்புகளுக்கு அரு மருந்தாகத் திகழ்கிறது.
இதன் இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவப் பலன்கள் மிக்கவை. உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின் சத்தும் வைட்டமின் C சத்தும் நிறைந்தவை, இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிக்கவையாகவும் திகழ்வதால், முசுமுசுக்கை இலைகளை, உணவில் சேர்த்து, துவையல் போலவோ அல்லது தோசை மாவில் சேர்த்து அரைத்து, தோசை போலவோ உண்டு வருகிறார்கள்.
சித்தர்கள் உரைத்த சிறந்த மூலிகைகளில், முசுமுசுக்கை மூலிகையும் ஒன்று. செரிமானமின்மை, வாந்தி போன்றவற்றை சரி செய்து, பசியைத் தூண்டும், நுரையீரல் பாதிப்பை சரியாக்கி சுவாச நரம்புகளில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் புண்களை ஆற்றி, சளியைப் போக்கும், உடல் சூடு தணித்து, கண் எரிச்சலை நீக்கும். தலையில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து, இளநரையை போக்கும் ஆற்றல் மிக்கது.