Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இறைச்சி வாங்குவதற்கு முன்னால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
இறைச்சி சாப்பிடுவதற்கு முன்னால் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
உடல் வலுப்பெற பலரும் இறைச்சியை சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதிலும் ஃப்ரை செய்த உணவுகள் கிரேவி போன்றவை அதிகம் விரும்பப்படுகிறது. இறைச்சி சமைக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் . எப்பிடி சமைக்க வேண்டும்? எப்பிடி சாப்பிட வேண்டும் போன்ற விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
செரிமானப்பிரச்சனை :
உணவு கெட்டியானதாக உள்ளே செல்லும் போது அது செரிமானம் ஆவதற்கு தண்ணீர் தேவைப்படும். உடலிலிருந்து தண்ணீரை எடுத்தபிறகு தாகத்தை உருவாக்கி அதிக தண்ணீரை குடிக்கச் செய்யும் இது செரிமாண மண்டலத்திற்கு கூடுதல் வேலை. இதனால் செரிமான மண்டலம் தொய்வுற்று பல தொந்தரவுகள் ஏற்படும்.
இதனால், இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குழம்பு வடிவத்தில் எடுப்பது தான் நல்லது. அப்படி சாப்பிட்டால் அவற்றின் ஆற்றலை உடனடியாக நம் உடலில் சேரும்.
நாட்டுக்கோழி சமையல் :
கோழியை தோலுடன் சமைப்பதே சிறந்தது. நாட்டுக் கோழிக்கு, தோலுக்கும் சதைக்கும் இடையிலான கொழுப்புப் படிவம் மிக மெல்லியதாகவே இருக்கும். இது சமைக்கும்போது தனியாகத் திரளாமல் குழம்புடன் கலந்துவிடும். செரிமானத்திலும் தொல்லை தராது. செரிமானத்தில் தொல்லை தராத கொழுப்பு, உடலுக்கு நேரடியாக ஊக்கம் தருவதாகவே இருக்கும்.
சமையல் பாத்திரம் :
இறைச்சி என்றாலே நன்றாக கழுவி குக்கரில் ஐந்தாறு விசில் வருகிற வரை நன்றாக வேக வைத்துவிட்டு மற்ற விஷயத்தை செய்வோம். இது தவறானது. அதிக அழுத்தத்தில் வேகும் உணவுப் பொருள் தனது சத்துக்களை இழக்க நேரிடும். அவற்றை உண்ணும் நமக்கும் செரிமானம் நடக்க தாமதமாகும்.
இறைச்சியை சமைக்க மண் பாத்திரத்தை தேர்வு செய்வது நல்லது. கூடுதலாக அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்று மண் பாண்டத்தையே தேர்ந்தெடுங்கள். மண் பாண்டத்தில் சமைக்கிறபோது, அடுப்பின் வெப்பம் அடிப்பகுதியுடன் தங்கி விடுவதில்லை. பாத்திரம் முழுதும் சீராகப் பரவி உணவுப் பொருளை ஒரே சீராக வேக வைக்கிறது.
கறியை எப்படி வாங்க வேண்டும்? :
எந்த இறைச்சியாக இருந்தாலும் அதன் ரத்தத்தை நீக்கிச் சமைப்பதே உடலுக்கு நன்மை தரும். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது அதில் முக்கியமானது, இறந்த உடன் ரத்ததில் உள்ள செல்கள் உடனடியாக அழுகத் தொடங்கிடும்.
நீங்கள் வாங்கும் கறி ஃப்ரஷ்ஷானது தானா என்பதையும் அதிலிருக்கும் ரத்தத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆடு வெட்டப்படும் போது அதிலிருந்து ரத்தம் முழுவதும் வடிந்துவிடும். இறைச்சியில் ரத்தம் நிற்காது
ஆட்டுக்கறி :
கறி வாங்கச் செல்லும் போது அதிகமாக இருக்கும் என்பதால் தொடைக்கறி என்று கேட்டு வாங்குவார்கள் . அதிக அசைவுகள் உள்ள தசைகள் கடினமானதாக இருக்கும்.
நெஞ்சுப்பகுதி மற்றும் முதுகுப்பகுதி தசைகள் மென்மையானதாக இருக்கும் என்பதால் அவற்றை வாங்கலாம்.