Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 5 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாவக்காய் ஜூஸுடன் கேரட் ஜூஸ் சேர்த்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மை என்னவென்று தெரியுமா?
பாகற்காய்- கேரட் கலந்த ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் எதற்கு செலவு செய்கிறோமோ இல்லையோ மாதந்தோறும் மருத்துவமனைக்கு என்று தனியாக பணத்தை ஒதுக்கி வைத்துக் கொள்கின்றோம். ஏனெனில், இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மருத்துவரை அணுகுகின்றனர்.
உங்களுக்குத் தெரியுமா கேரட் ஜூஸ் மற்றும் பாவக்காய் ஜூஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் குடிக்கும் போது 8 தேக ஆரோக்கிய பலன்கள கிடைக்குமாம். அட ஆமாங்க, தினமும் காலையில் 3 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பாவக்காய் ஜூஸ் சேர்த்து சிறிது தேன் கலந்து குடிப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 மாதத்திற்கு குடிக்க வேண்டும்.
அவ்வாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று இப்போது பார்ப்போம் வாருங்கள்...
உடல் எடை குறைக்க உதவுகிறது :
கேரட் ஜூஸ் மற்றும் பாவக்காய் ஜூஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் குடிப்பதால் அதிகப்படியாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலிற்குக் கிடைக்கிறது. அது உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
வயிற்றை சுத்தமாக்குகிறது
இந்த இயற்கை ஜூஸில் உள்ள என்சைம்கள் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்கிறது.
அலர்ஜிகளை சரி செய்யும்
இந்த ஜூஸ் கலவையில் அதிக அளவில் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது சரும அழற்ஜிகளான தடுப்புகள் மற்றும் படை போன்றவற்றை தடுத்துவிடும்.
கண் பார்வைக்கு வலிமை சேர்க்கும்
இந்த இயற்கை ஜூஸில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் பார்வை நரம்புகளுக்கு வலிமை சேர்த்து கண் பார்வை மேம்படவும் அதன் வலிமைக் குறையாமலும் இருக்க உதவுகிறது.
கொழுப்பைக் குறைக்கிறது
கேரட் ஜூஸ் மற்றும் பாவக்காய் ஜூஸ் கலவையில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்றிவிடும்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
இந்த ஜூஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது இரத்த தமனிகளை விரிவடையச் செய்கிறது. இதனால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இந்த ஜூஸில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இரத்த சிவப்பு செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால், இரத்த சிவப்பு செல்கள் நோய் கிருமிகளோடு எதிர்த்துப் போராடுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயைக் குணப்படுத்துகிறது
பாவக்காய் ஜூஸ் மற்றும் கேரட் ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை நீக்கி விடுகிறது. நீரிழிவு நோயின் சில அறிகுறிகளுக்கும் ஏற்ற சிகிச்சையாக உள்ளது.