Just In
- 1 hr ago
வார ராசிபலன் (03.06.2022-09.07.2022) - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- 2 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க நேரிடலாம்...
- 12 hrs ago
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- 14 hrs ago
தினமும் இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்குமாம் தெரியுமா?
Don't Miss
- News
"பூனைக்குட்டி" வெளியே வருகிறது.. பாஜகவில் இணைகிறார் அமரீந்தர் சிங்.. குடியரசு துணை தலைவர் வேட்பாளரா?
- Technology
'இதைப் பார்த்துக் கொண்டிருந்தால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம்': 23 வயதில் இறந்த பிரபல Youtuber!
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Movies
மகன் விஜய் வரல.. மனைவி ஷோபாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா!
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ரொமான்டிக்கான தம்பதிகள் தான் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவருக்கும் காதலித்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளின் திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது.
பெரும்பாலும் பிரபலங்கள் தங்களின் முதல் திருமண விழாவைக் கொண்டாடுவதற்கு வெளிநாடுகளுக்கு செல்வது தான் வழக்கம். ஆனால் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்களின் முதல் திருமண நாளன்று முதலில் திருப்பதி பெருமாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து நேற்றே இவர்கள் கிளம்பிவிட்டனர். இன்று தங்களது திருமண நாளன்று குடும்பத்தினருடன் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
இங்கு திருப்பதி பெருமாளை தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களும், தீபிகா படுகோனேவின் தோற்றம் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

சப்யசாச்சி புடவை
இது தான் தீபிகா படுகோனே திருப்பதிக்கு அணிந்து வந்த சிவப்பு நிற பட்டுப்புடவை. இந்த புடவை டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்தது. தீபிகா அணிந்திருந்த சிவப்பு நிற புடவை கோல்டன் ஜரிகையால் அழகாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. தீபிகா படுகோனே தனது திருமண நாளன்று அணிந்து வந்த இந்த சிவப்பு நிற புடவை அவருக்கு மணப்பெண் தோற்றத்தைக் கொடுத்தது எனலாம்.

ஹை-நெக் ஜாக்கெட்
தீபிகா படுகோனே இந்த சிவப்பு நிற புடவைக்கு அணிந்திருந்த ஜாக்கெட் டிசைன் அற்புதமாக இருந்தது. அதுவும் கோல்டன் ஜரிகை கொண்ட ஹை-நெக் ஜாக்கெட் அணிந்தது அவரது தோற்றத்தை மிகவும் சிறப்பாக காட்டியது.

மேக்கப்
தீபிகா சிவப்பு நிற பட்டுப் புடவைக்கு மேற்கொண்ட மேக்கப் அற்புதமாக இருந்தது. இவர் உதட்டிற்கு கோரல் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, லேசாக கன்னங்களுக்கு ப்ளஷ் அடித்து சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டிருந்தார். மேலும் நெற்றியின் உச்சியில் குங்குமத்தை வைத்திருந்தது, அவரை மங்களகரமாக காட்டியது எனலாம்.

ஹேர் ஸ்டைல்
தீபிகா படுகோனே தான் அணிந்து வந்த பட்டுப்புடவைக்கு கொண்டை போட்டிருந்தார். இதில் ஒரு குறை என்னவென்றால், மல்லிகைப் பூ இல்லாதது தான். அது மட்டும் வைத்திருந்தால், இன்னும் அழகாக இருந்திருப்பார்.

ஆபரணங்கள்
தீபிகா சப்யசாச்சியின் சிவப்பு நிற பட்டுப் புடவைக்கு ஏற்றவாறு, தங்க ஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தார். அதில் கழுத்தையொட்டி நெக்லேஸ் மற்றும் நீளமான ஆரம் அணிந்து, காதுகளுக்கு பெரிய ஜிமிக்கி கம்மல் அணிந்திருந்தது, அட்டகாசமாக இருந்தது.

ரன்வீர் சிங்
நடிகர் ரன்வீங் சிங் கூட தீபிகா படுகோனேவிற்கு இணையாக அற்புதமாக காணப்பட்டார். அதுவும் அவர் ஷெர்வானி அணிந்து, மேலே பட்டு பார்டர் கொண்ட பிங்க் நிற ஷால், காதுகளுக்கு வளையம் அணிந்து மாப்பிள்ளை தோற்றத்தில் சிறப்பாக காட்சியளித்தார்.

புன்னகை
இது திருப்பதி பெருமாளை தரிசித்த பின் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே சந்தோஷத்தில் புன்னகைக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ.

குடும்பம்
இது திருப்பதியில் குடும்பத்தினருடன் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே சேர்ந்து எடுத்த போட்டோ.