Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies ஓவர்சீஸில் என்ன அலப்பறை பண்றாங்க பாருங்க.. கில்லி ரீ ரிலீஸ்.. சும்மா வசூல் அள்ளப்போகுது!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இயற்கையாகவே உங்க சருமத்தை பிரகாசிக்க வைக்க... இந்த 7 பொருட்கள் போதுமாம் தெரியுமா?
உங்கள் சரும பராமரிப்பிற்கு மஞ்சள் ஒரு வரம் போன்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு பொலிவையும், பளபளப்பையும் தருகிறது.
நமது அழகு என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. செயற்கை ரசாயண பொருட்களை கொண்டு உங்கள் முகத்தை நீங்கள் அழகு படுத்தலாம். ஆனால், அதில் உங்களுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எப்போதும் இயற்கையான பொருட்களே நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. நாம் அழகாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவோம். அதற்கான முயற்சியையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நம்முடைய அழகை நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கறை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பாமல் இருப்பார்கள்.
நமது சமையலறையில் இயற்கையாகவே சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைக் கொண்டுவரக்கூடிய பல்வேறு பொருட்கள் உள்ளன. இந்த பொருட்கள் தோலை உரித்தல், ஈரப்பதமாக்குதல், பிரகாசமாக்குதல், பொலிவாக்குதல் மற்றும் சருமத்தை மென்மையாக்கும் அனைத்து பண்புகளையும் கொண்டுள்ளன. சீரான இடைவெளியில் பயன்படுத்தினால், சருமத்தின் உட்புற பளபளப்பைக் கொண்டு வரக்கூடிய சிறந்த பொருட்களின் பட்டியல் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தேன்
தேன் நமது சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசர். இதை நீங்கள் ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தலாம் அல்லது மாய்ஸ்சரைசராக சருமத்தில் மசாஜ் செய்யலாம். நீங்கள் இதை ஒரு ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்தினால், அதனுடன் பப்பாளி, வாழைப்பழம் அல்லது புதிய ஆரஞ்சு சாறுடன் சேர்த்து பயன்படுத்தலாம். நீங்கள் மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதில் சில எலுமிச்சைத் துளிகள் கலந்து கொள்ளுங்கள். பின்னர், உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் இருப்பதை நீங்களே காண்பீர்கள்.
பால்
பால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. ஒரு காட்டன் பேடை எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பாலில் நனைத்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தைச் சுத்தம் செய்யவும். இது ஒரு இயற்கையான க்ளென்சர் மற்றும் உங்கள் சருமத்தை கறை இல்லாமல் பிரகாசமாக்கும். இதை தினமும் காலை குளியல் முறையில் பயன்படுத்தலாம். இரவில் தூங்குவதற்கு முன்பும் அனைத்து தூசு, மாசு மற்றும் அழுக்குகளை அகற்ற பயன்படுத்தலாம். இது உங்களுக்கு சிறந்த பளபளப்பான சருமத்தை தருகிறது.
தயிர்
தயிர் வயதான சருமத்தை தடுக்கும் தன்மை கொண்டது. தயிரைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள நீரேற்றம் மற்றும் ஈரப்பதத்தை நீக்கி, கறை இல்லாமல் இளமையுடன் வைத்திருக்கும். இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் முகத்திற்கு ஒரு சீரான தோற்றத்தை தருகிறது. லாக்டிக் அமிலம் மற்றும் சில ப்ளீச்சிங்கால் தான் தயிர் சருமத்திற்கு பல அற்புதமான பலன்களைத் தருகிறது.
மஞ்சள்
உங்கள் சரும பராமரிப்பிற்கு மஞ்சள் ஒரு வரம் போன்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு பொலிவையும், பளபளப்பையும் தருகிறது. மஞ்சள் உடல்நலம் மற்றும் சரும பாதுகாப்புக்கு பல அதிசயங்களை செய்கிறது. பருப்பு மாவு, தயிர் அல்லது பாலுடன் மஞ்சளை சேர்த்து ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
கற்றாழை
காற்றாழை பல்வேறு நன்மைகளை கொண்ட ஒரு அதிசய செடி. இது ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகப்பெரிய பண்புகள் மற்றும் நன்மைகளைக் கொண்டுள்ளது. கற்றாழை சந்தையில் கிடைக்கும் என்றாலும், உங்கள் தோட்டத்தில் உள்ள செடியில் இருந்து அகற்றப்பட்ட புதிய கற்றாழையை விட சிறந்தது எதுவுமில்லை. இது சூரிய ஒளியில் இருந்து எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவது மட்டுமல்லாமல், சரும செல்களை சரிசெய்யும் கொலாஜனையும் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஒளிர வைக்க உதவுகிறது.
எலுமிச்சை
எலுமிச்சை, மற்ற சிட்ரஸ் பழங்களைப் போலவே, இயற்கையான ப்ளீச்சிங் முகவர்கள். இவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. உங்கள் சருமத்தை இயற்கையாக ஒளிர செய்ய எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறு இறந்த சரும செல்களை வெளியேற்றி மெலனின் உற்பத்தியை குறைக்கிறது. இது முகப்பருவை எதிர்த்துப் போராடும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தூய எலுமிச்சை சாறு பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே தயிர் மற்றும் தேனில் கலந்து ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தவும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் வைட்டமின் பி6 நிரம்பியுள்ளது. இது சருமத்தின் நிறத்தை திறம்பட வெளியேற்றி ஒளிரச் செய்கிறது. முகத்தில் உள்ள புள்ளிகளை எவ்வாறு அகற்றுவது என்று நீங்கள் யோசித்தால், ஒரு உருளைக்கிழங்கு பேஸ்ட் அல்லது சாறு எடுத்து தேன், எலுமிச்சை அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க்கை உருவாக்கவும். உங்கள் கருவளையங்களை நீக்கவும் இது உதவுகிறது.
இறுதிகுறிப்பு
உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவும் இயற்கையான முறையில் சருமத்தை சரிசெய்யும் பொருட்களை பயன்படுத்துங்கள். அதன் மூலம், நீண்ட காலத்திற்கு நீங்கள் இளமையாக இருக்கும் சருமத்தை பெறலாம்.