Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்க முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை வெச்சு இப்படி மாஸ்க் போடுங்க...
நாம் சாப்பிடும் பழங்கள் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. அதற்கு பழங்களை சாப்பிடுவதோடு, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் போடலாம்.
அனைவருக்குமே எப்போதும் அழகாகவும், இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் தங்கள் சருமத்திற்கு பல்வேறு சரும பராமரிப்புப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் அனைவருக்குமே கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்கள் நல்ல பலனைத் தருவதில்லை. அதோடு அந்த பொருட்களால் சில பக்க விளைவுகளையும் சந்திப்பார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலம் சரும அழகை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டால், சருமம் இயற்கையாகவே பளிச்சென்று அழகாக இருக்கும்.
அதுவும் நாம் சாப்பிடும் பழங்கள் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தக்கூடியவை. அதற்கு பழங்களை சாப்பிடுவதோடு, அவற்றைக் கொண்டு ஃபேஸ் பேக் அல்லது ஃபேஸ் மாஸ்க் போடலாம். இதனால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பரு வடுக்கள் போன்றவை மறைந்து, சருமம் அழகாகவும் பளிச்சென்றும் இருக்கும். இப்போது எந்த பழங்களை எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமம் பொலிவோடு இருக்கும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழம்
வறட்சியான சருமத்தைக் கொண்டவரா? அப்படியானால் வாழைப்பழத்தை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்துங்கள். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். மேலும் வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
பப்பாளி
உங்களுக்கு கருவளையங்கள் இருந்தால், பப்பாளி உங்கள் சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி, ப்ரீ ராடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். கூடுதலாக, பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதி இறந்த செல்களை நீக்கி, செல்களை புதுப்பிக்க உதவும். அதற்கு சிறிது நன்கு கனிந்த பப்பாளி துண்டை மசித்து, அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கபவ வேண்டும்.
ஆரஞ்சு
சிட்ரஸ் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கொண்ட ஆரஞ்சு, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். கூடுதலாக, இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து சருமத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி பொடி செய்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இன்னும் உடனடி சரும பொலிவு கிடைக்க, தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆப்பிள்
காற்று மாசுபாடு மற்றும் சூரிய ஒளியால் சருமம் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமானால், ஆப்பிளை முயற்சிக்கலாம். ஆப்பிளில் காப்பர் உள்ளது. இது சருமத்தில் மெலனின் உற்பத்திக்கு உதவி சருமத்திற்கு பொலிவைத் தரும் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். அதற்கு மிக்சரில் பாதி ஆப்பிளை போட்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்து, அதைக் கொண்டு சருமத்தை மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறி, சருமம் பளிச்சென்று காணப்படும்.
ஸ்ட்ராபெர்ரி
சென்சிடிவ் சருமத்தைக் கொண்டவர்கள் மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஸ்ட்ராபெர்ரி சிறந்தது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் எவ்வித வீக்கத்தையும் ஏற்படுத்தாது மற்றும் இது சரும செல்களை ஆரோக்கியமாக்கி, சருமத்தை பொலிவாக்கும். மேலும் ஸ்ட்ராபெர்ரியில் சாலிசிலிக் அமிலம் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்கும். அதற்கு சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை அரைத்து, அத்துடன் சிறிது தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து, நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.