Just In
- 1 min ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- 3 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 9 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
Don't Miss
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'இந்த' மலர்களின் நீரை யூஸ் பண்ணா.. ஹீரோயின் மாதிரி பொலிவான அழகான சருமம் கிடைக்குமாம் தெரியுமா?
ஆரஞ்சுப் பூக்கள் மற்றும் ரோஜா இதழ்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட ரோஸ் வாட்டர் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இன்று, ஈரப்பதம், டோனிங் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பல நறுமண மூலிகைகள் பயன்படுத்தப்படுகி
மலர்கள் மிக மென்மையானது, நம் சருமத்தை போலவே. நம் சரும ஆரோக்கியத்திற்கு மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் பல நூற்றாண்டுகளாக மலர்கள் நீர் அல்லது ஈக்ஸ் மலர்கள் அழகு சாதன பொருளாகவும் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆரஞ்சுப் பூக்கள் மற்றும் ரோஜா இதழ்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட ரோஸ் வாட்டர் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் இன்று, ஈரப்பதம், டோனிங் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக பல நறுமண மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்தியாவசிய எண்ணெய்களுக்கு மாறாக, மலர்கள் நீர் பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பானது. ஏனெனில் அவை சிறிய அளவிலான அத்தியாவசிய எண்ணெயைக் கொண்ட பூக்களிலிருந்து பெறப்படுகின்றன.
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரோஸ் வாட்டர் கிட்டத்தட்ட தோல் பராமரிப்பு பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. எப்படியிருந்தாலும், ரோஸ் வாட்டர் உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் மற்ற வகையான பூ நீரைச் சேர்க்கத் தொடங்கும் நேரம் இது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இக்கட்டுரையில், ரோஸ் வாட்டர் அல்லாத மிகவும் பயனுள்ள சில மலர்களின் நீர் உங்களுக்கு வழங்கும் சரும நன்மைகள் பற்றி காணலாம்.
சிட்ரஸ் ஆரஞ்சு
சருமத்தை புத்துணர்ச்சி மற்றும் டோனிங் செய்வதற்கு ஏற்ற பூ நீர் இது. சிட்ரஸ் ஆரஞ்சு பூ ஆண்டிசெப்டிக், அழற்சி எதிர்ப்பு, ஈரப்பதம் மற்றும் டோனிங் பண்புகளைக் கொண்டுள்ளது. சரும உணர்திறன், சோர்வு மற்றும் வயதான தோற்ற சருமத்திற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
கெமோமில்
கெமோமில் பூவில் இனிமையான பண்புகள் நிறைந்துள்ளன. இது உணர்திறன் மற்றும் அழற்சியுள்ள சருமத்திற்கு ஏற்றது. குழந்தை சரும பராமரிப்புக்கு இது சிறந்தது. கெமோமில் ஒரு நீர்வாழ் மலர் ஆகும். இதில் கரிம சாறுகள் உள்ளன. இது சருமத்தின் இயற்கையான பிஎச் சமநிலையை பராமரிக்கும். அதே வேளையில், சருமத்தை ஆற்றவும், குளிர்ச்சியாகவும், மீளுருவாக்கம் செய்யவும், அற்புதமான பளபளப்பையும், புத்துணர்ச்சி மற்றும் தூய்மை உணர்வையும் தருகிறது.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி பூ அதன் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் காரணமாக சரும குறைபாடுகளை தடுத்து பாதுகாக்கும் திறனை கொண்டுள்ளது. ரோஸ்மேரி சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தீக்காயங்களை குணப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும் உதவுகிறது. இந்த மூலிகையின் மருத்துவ குணங்கள், தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி உள்ளிட்ட நாள்பட்ட தோல் நிலைகளுக்கு ஒரு சக்திவாய்ந்த சிகிச்சையாக அமைகிறது.
தேயிலை மரம்
தேயிலை மரத்தின் பூ நீர் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது மற்றும் தேயிலை மர பூ எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது. இந்த எண்ணெய் முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு பிரபலமான தேர்வாகும். ஏனெனில், இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. இது சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது முகப்பரு தழும்புகளைத் தடுக்கவும் குறைக்கவும் உதவலாம். மென்மையான பொலிவான சருமத்தை உங்களுக்கு வழங்குகின்றன.
ஹனிசக்கிள்
ஹனிசக்கிள் பூ நீர் உங்கள் சருமத்திற்கு பொலிவை வழங்குவதன் மூலம் மந்தமான சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது. இது ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தால் நிறைந்துள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக ஒரு சரும பாதுகாப்பை வழங்குகிறது.
ஜெரனியம்
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், எண்ணெய் மற்றும் சருமத்தை குறைக்க உதவும் ஜெரனியம் பூ நீரை தேர்வு செய்யவும். ஜெரனியம் எண்ணெய் இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு எண்ணெய் என்பதால், இது சருமத்தின் ஆரோக்கியத்தையும் இயற்கையான பளபளப்பையும் தீவிரமாக அதிகரிக்கிறது. மேலும், முகப்பரு ஏற்படக்கூடிய சருமத்திற்கு எதிராக போராடுகிறது.
லாவெண்டர்
லாவெண்டர் பூ நீர், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக முகப்பரு, நிறமாற்றம், எண்ணெய், கரும்புள்ளிகள் மற்றும் எரிச்சல்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்றது. மேலும், இது முகப்பருவைத் தூண்டும் பாக்டீரியாக்கள் மற்றும் அடைபட்ட துளைகளை அழிக்க உதவுகிறது. லாவெண்டர் ஏற்கனவே உள்ள சரும கறைகளுக்கு சிகிச்சையளிக்கும் போது முகப்பருக்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.
புதினாகீரை ஹைப்ரிட்
புதினா மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும், அனைத்து பூ நீரிலும் தோலை உற்சாகப்படுத்துகிறது. முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ள சருமத்திற்கு இது ஏற்றது.
பிரியாணி இலை பூ
பிரியாணி இலை பூவின் ஆண்டிசெப்டிக் திறன்களின் காரணமாக, லாரல் பூ நீரை முகப்பரு கரும்புள்ளிகள் மற்றும் தினசரி சருமத்தை சுத்தப்படுத்த ஒரு கலவை மற்றும் எண்ணெய் சருமத்திற்கு லோஷனாகப் பயன்படுத்தலாம்.