Just In
- 3 min ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 1 hr ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 2 hrs ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 2 hrs ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- News உலகின் சிறந்த ஏர்போட்! முதலிடத்தில் பயங்கர ட்விஸ்ட்.. லிஸ்டில் 2 தென்னிந்திய விமான நிலையங்கள்.. செம
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Movies அரண்மனை 4 எடுக்க சிறுமிகள்தான் காரணம்.. சுந்தர்.சி சொன்ன ஆச்சரிய தகவல்
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும் முகம் பிசுபிசுன்னு இருக்கா? அதைப் போக்க இதோ சில டிப்ஸ்...
என்ன தான் கோடைக்காலத்தை கடந்துவிட்டாலும், மாலையில் தாங்க முடியாத அளவில் மிகுந்த வெப்பத்தை உணர நேரிடுகிறது. மேலும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், முகத்தில் எண்ணெய் வழிந்து சருமம் பிசுபிசுவென்று அசிங்கமாக இருக்கும். இந்த நிலையைப் போக்க சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தி முகத்தைக் கழுவலாம்.
ஆனால் பொலிவிழந்திருக்கும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்ட முடியாது. அதற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகள் தான் உதவும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பிசுபிசுவென்று இருக்கும் முகத்தை பொலிவோடு வெளிக்காட்ட உதவும் ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தியில் ஏராளமான சக்திவாய்ந்த உட்பொருட்கள் உள்ளன. இந்த சீமைச்சாமந்தியைக் கொண்டு டீ தயாரித்து, அத்துடன் ஓட்ஸ் பொடி, சிறிது பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
கிவி
ஒரு கிவி பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு, கனிந்த பகுதியை மசித்து, அத்துடன் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 துளிகள் சூரியகாந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, முகம், கை, கால் மற்றும் கழுத்தில் தடவி 2 நிமிடம் தேய்த்து, பின் கழுவ வேண்டும்.
சோள மாவு
சோள மாவு சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும். அத்தகைய சோள மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பட்டை மற்றும் ஜாதிக்காய்
1 டீஸ்பூன் பட்டை பொடியுடன், 1 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, முகம் பொலிவாகும்.
அவகேடோ
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் அவகேடோ பழத்தை மசித்து சேர்த்து, அதோடு 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும், முதுமைக் கோடுகளும், சுருக்கங்களும் மறையும்.