Just In
- 29 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!
பெண்களுக்கு அடர்த்தியான புருவமும், பெரிய இமைகளை கொண்ட கண்களும் மிக அழகான ஒரு தோற்றத்தை தரும். புருவமே இல்லாமல் பெரிய கண்களுடன் இருந்தால் அழகு கொஞ்சம் குறைந்துதானிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
நிறைய பேருக்கு, பிறந்தது முதலே புருவங்கள் சரிவர வளர்ச்சி இருக்காது. அதற்காக அப்படியே விட வேண்டுமென்பதில்லை. போதிய பராமரிப்பு கொடுத்தால் நிச்சயம் மற்றவர்களைப் போல உங்களுக்கும் அடர்த்தியான வில் போன்ற புருவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை
அப்படியொரு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது. உபயோகித்து பாருங்கள். பின்னர் உங்கள் பலனை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
தேவையானவை :
விளக்கெண்ணெய்
-
அரை
டீஸ்பூன்
விட்டமின்
ஈ
எண்ணெய்
-
2
கேப்ஸ்யூல்,
சோற்றுக்
கற்றாழை
சதைப்பற்று-
1
டேபிள்
ஸ்பூன்
வாசலின்
-
1
டேபிள்
ஸ்பூன்
விளக்கெண்ணெய் புருவத்தில் முடி வளர்ச்சியை தூண்டும். விட்டமின் ஈ மற்றும் வாசலின் அங்கே ஈரப்பதம் அளித்து, சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மிருதுவாக்கும். சோற்று கற்றாழை முடி வளர்ச்சியை தூண்டி புருவத்தை அடர்த்தியாக வளர்ச் செய்யும்.
செய்முறை :
முதலில் விளக்கெண்ணெயில் விட்டமின் ஈ எண்ணெயை கலந்து, பின் சோற்றுக் கற்றாழை மற்றும் வாசலினை சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த க்ரீமை தினமும் இரவு தூங்குவதற்கு முன், புருவத்திலும் இமையிலும் தடவிவிட்டு தூங்குங்கள். க்ரீமை தடவதற்கு முன் புருவத்தின் முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் க்ரீம் தடவும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எளிதில் உறியப்படும். வளர்ச்சியையும் தூண்டும்.