Just In
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்...
கோடை வந்தாலே உங்கள் முகத்தில் வலியைத் தரக்கூடிய முகப்பருக்கள் வந்து தொல்லையைத் தருகிறதா? என்ன செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
முகப்பருக்கள் அதிகப்படியான எண்ணெய் பசை இருந்தாலோ, உடலில் நீர்ச்சத்து குறைந்து வெப்பநிலை அளவுக்கு அதிகமாக இருந்தாலோ வரும். இதற்கு முதலில் உடலை குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, கோடையில் சருமத்திற்கு அதிக கவனிப்புகளை செலுத்த வேண்டும். இங்கு கோடையில் பிம்பிள் வராமல் இருக்க சில சிம்பிளான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இளநீர்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதுடன், இளநீரைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள பிம்பிள் நீங்குவதோடு, அவை வருவது தடுக்கப்பட்டு, முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
ரோஸ் வாட்டர்
கோடையில் ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் முகத்தை பல முறை துடைத்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசைகள் நீங்கி, முகம் கோடையில் பளிச்சென்று இருக்கும்.
வேப்பிலை தண்ணீர்
வேப்பிலையை இரவில் படுக்கும் போது ஒரு பௌல் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவி வந்தால், பிம்பிள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் மறையும்.
காப்பர் தண்ணீர்
கோடையில் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால் நல்லது. அதுமட்டுமின்றி, காப்பர் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டுள்ள நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால், பிம்பிள் மட்டுமின்றி, அதனால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
தண்ணீர்
தண்ணீர் மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு தண்ணீரை அதிக அளவில் குடிப்பதோடு, அவ்வப்போது குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பிரகாசமாகவும், பிம்பிள் இல்லாமலும் இருக்கும்.
குறிப்பு
பிம்பிள் முகத்தில் வந்தால், அதனை நகம் கொண்டு பிய்த்து எடுக்க கூடாது. அப்படி செய்தால், அதிலிருந்து வெளிவரும் சீழ் மற்ற இடங்களில் பட்டு, அதனால் பிம்பிள் இன்னும் அதிகமாகும். ஆகவே பிம்பிள் வந்தால், முகத்தில் கைகளை வைப்பதை தவிர்த்திடுங்கள்.