Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
கை மற்றும் கால்களில் உள்ள கருமையை போக்க சில சிம்பிளான வழிகள்!!!
அனைவருக்கும் வெள்ளை சருமத்தின் மீது ஆசை இருக்கும். அதற்காக கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். விலை அதிகம் இருப்பதால், அப்படி வாங்கும் க்ரீம்களை முகத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். கை மற்றும் கால்களை மறந்துவிடுவோம். அழகு என்பது முகத்தில் மட்டும் இல்லை, தலை முதல் கால் வரை அனைத்திலும் உள்ளது.
ஆகவே வெள்ளையாக இருக்க வேண்டுமென்றால், முகத்திற்கு மட்டுமன்றி, கை மற்றும் கால்களுக்கும் போதிய பராமரிப்பு கொடுக்க வேண்டும். சொல்லப்போனால் முகத்தை விட, கை மற்றும் கால்களுக்கு சற்று அதிகமாகவே பராமரிப்பு அவசியம். ஏனெனில் வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்களின் தாக்கம், முகத்தை விட, கை மற்றும் கால்களில் தான் அதிகம் உள்ளது. இதனால் கை மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும்.
இப்படி சூரியக்கதிர்களால் கருமையான கை மற்றும் கால்களை வெள்ளையாக்குவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைத் தவறாமல் அன்றாடம் அல்லது வாரம் ஒருமுறை செய்து வந்தால், நிச்சயம் கை மற்றும் கால்களை வெள்ளையாகப் பராமரிக்கலாம். சரி, இப்போது கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

வழி: 1
ஒரு பௌல் குளிர்ச்சியான தயிரில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

வழி: 2
வெள்ளரிக்காயை துருவிக் கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

வழி: 3
தினமும் தக்காளியை இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு முகம், கை மற்றும் கால்களில் தேய்த்து ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கும்.

வழி: 4
5-10 பாதாமை இரவில் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து அதில் 5 துணிகள் சந்தன எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

வழி: 5
பப்பாளியை மசித்து, அதனை கருமையாக உள்ள முகம், கை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தில் உள்ள கருமை மறையும்.

வழி: 6
மஞ்சள் அனைத்துவித சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைத் தரும். அதிலும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள் தூளில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

வழி: 7
உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

வழி: 8
கற்றாழை ஜெல்லை தினமும் முகம், கை மற்றும் கால்களில் தடவி நன்கு உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.

வழி: 9
எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து, எண்ணெயை தடவ வேண்டும்.



Click it and Unblock the Notifications











