Just In
- 4 min ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 5 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 6 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முகப்பரு அழகை கெடுக்குதா? ஈஸியா வீட்டிலேயே போக்கலாம்!!!
முகத்தின் அழகை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப் புள்ளிகள் என்று பல உள்ளன. இவை அனைத்தும் வருவதற்கு காரணம் நமது செயல்களே ஆகும். எப்படியெனில் நாம் அழகாக இருக்க வேண்டுமென்று, கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை முகத்திற்கு பயன்படுத்திவிடுகிறோம். க்ரீம்களால் எப்படி ஏற்படும் என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் அந்த க்ரீம்களும் பருக்கள் உண்டாவதற்கு ஒரு காரணம். ஏனெனில் அந்த க்ரீம்களில் கெமிக்கல் பல கலந்திருக்கும். இதனால் அந்த கெமிக்கல்கள் சருமத்தின் செல்களை பாதித்துவிடும்.
குறிப்பாக இந்த பிரச்சனை இளம் வயதுள்ளோருக்கு தான் ஏற்படும். அது ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, இருவருமே இந்த பிரச்சனைக்கு ஆளாவார்கள். இதற்கு ஹார்மோன்களின் மாறுபாடும் ஒருவிதக் காரணம். எனவே அவ்வாறு முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் பிம்பிள் வந்தால், அப்போது அதனைப் போக்க வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்தே நீக்கலாம். இப்போது அது என்ன பொருட்கள், எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று பார்ப்போமா!!!
ஆப்பிள்
இந்த முறையில் ஆப்பிளை துருவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய ஆப்பிள் மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளுடன் சிறிது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் பிம்பிள் உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், பருக்கள் போவதோடு, அதில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு வேக வைத்து, பின் குளிர்ந்ததும், அதில் 12 பாதாமை அரைத்துப் போட்டு, சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகம் நன்கு பொலிவோடு, பருக்கள் இல்லாமல் இருக்கும்.
பப்பாளி
பப்பாளியின் சாற்றை முகத்தில் தினமும் தடவி, காய வைத்து கழுவி வந்தால், பிம்பிளைத் தடுக்கலாம்.
புதினா
புதினாவை அரைத்து, அதன் சாற்றை வடித்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன், அழகாகக் காணப்படும்.
தேன்
தேனை நேரடியாக முகத்தில் தடவினாலும், பருக்களை குறைக்க முடியும். இதனால் மருத்துவ குணம் வாய்ந்த தேன், சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை தடுத்து, சருமத்தை பாதுகாக்கும்.
வேப்பிலை
வேப்பிலையின் இலையை அரைத்து, அதினை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், அதில் உள்ள காயங்களை குணப்படுத்தும் தன்மையானது, சருமத்தில் ஏற்படும் இதர பிரச்சனைகளையும் தடுத்துவிடும்.