Just In
- 50 min ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 1 hr ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 1 hr ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
Don't Miss
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Movies யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
- Technology இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாம் வேஸ்ட்டென நினைக்கும் அரிசி வேகவைத்த நீரால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்ன தெரியுமா?
நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, அதில் சிறிது அளவு மாவுச்சத்தை வெளியிடுகிறது, ஸ்டார்ச் கொண்ட இந்த அதிகப்படியான நீர் ‘அரிசி நீர்’ என்று அழைக்கப்படுகிறது.
காலம் காலமாக நாம் முன்னோர்கள் அருந்திவந்த ஒரு ஆரோக்கிய பானம் என்றால் அது அரிசி கஞ்சி ஆகும். கடந்த காலங்களில் இதுதான் அனைவரின் அத்தியாவசிய உணவாக இருந்தது. நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் முக்கிய காரணமாக இதுதான் இருந்தது. தற்போது இதனை அரிசி நீர் என்று அழைக்கப்படுகிறது.
நாம் அதிக வெப்பநிலையில் அரிசியை தண்ணீரில் சமைக்கும்போது, அதில் சிறிது அளவு மாவுச்சத்தை வெளியிடுகிறது, ஸ்டார்ச் கொண்ட இந்த அதிகப்படியான நீர் 'அரிசி நீர்' என்று அழைக்கப்படுகிறது. தோல் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அரிசி நீர் ஒரு மந்திர அழகுப்பொருள் ஆகும், இதில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இந்த பதிவில் இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
தெளிவான முக சருமம்
அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது மற்றும் ‘இனோசிட்டால்' எனப்படும் ஒரு சத்து உள்ளது, இது உயிரணு வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது, மேலும் இரத்த ஓட்டத்தை மென்மையாக்குகிறது, இதன் விளைவாக முகத்தின் தோல் தெளிவாகிறது.
மென்மையான சருமம்
அரிசி நீர் சருமத்திற்கு ஒரு சிறந்த மென்மையாக்கும் முகவர். இது இறந்த செல்களை நீக்கி, குறைபாடற்ற மற்றும் மென்மையான சருமத்தை அடைய உதவுகிறது.
ஸ்கின் டோனர்
பொதுவாக வேதியியல் சரும டோனர்களைதான் அனைவரும் பயன்படுத்துவார்கள். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படலாம். இதற்குப் பதிலாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பதிப்பை அரிசி நீரை ஸ்கின் டோனராக பயன்படுத்தவும். இது முக சருமத்தை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், பளபளக்கும்.
MOST READ: வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களின் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் தீராத வறுமையை ஏற்படுத்துமாம்...!
முகப்பருக்கள்
முகப்பருவைப் போக்க பருத்தி பந்தைப் அரிசி நீரில் ஊறவைத்து பருக்கள் மீது வைப்பது நல்லது. அரிசி நீரை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் சருமம் சிவத்தலும் குறைகிறது.
சரும அழற்சியை போக்க
தோல் மருத்துவர்களின் கூற்றுப்படி, அரிசி நீரில் இருக்கும் ஸ்டார்ச் அரிக்கும் தோலழற்சியில் இறந்த செல்களை குணப்படுத்த உதவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15-20 நாட்களுக்கு புதிய அரிசி தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் விரும்பிய முடிவைப் பெறுவார்கள்.
ஒளிரும் சருமம்
விலையுயர்ந்த அழகு சாதனங்களுக்குப் பதிலாக, இரவு படுக்கைக்குச் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அரிசி நீரைப் முகத்தில் தடவுங்கள். இந்த தண்ணீரை 1 மாதத்திற்கு தவறாமல் பயன்படுத்துவது அழகான மற்றும் பிரகாசமான சருமத்தை அடைய உதவும்.
MOST READ: நீங்கள் எந்த எண்ணெயில் சமைக்கிறீங்க? நீங்க சமைக்கிற எண்ணெய்களில் இருக்கும் ஆபத்து என்ன தெரியுமா?
எரியும் சருமம்
டாக்டர்களின் கூற்றுப்படி, கடுமையான வெப்பத்தால் ஏற்படும் எரிந்த தோல் மற்றும் தோல் அழற்சிக்கு அரிசி நீர் ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். சிறு சந்தர்ப்பங்களில் அரிசி நீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது எரியும் சருமத்திற்கு நல்லது.
தடிப்பு மற்றும் இறந்த சருமம்
சமீபத்திய ஆராய்ச்சியின் படி, அரிசி நீரில் இனோசிட்டால் உள்ளது, இது ஒரு வகை கார்போஹைட்ரேட், இது மேற்பரப்பு உராய்வு, சேதமடைந்த செல்கள் மற்றும் முடி நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
MOST READ: பண்டைய கால இந்தியர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததற்கு அவர்களின் இந்த பழக்கங்கள்தான் காரணமாம்...!
சேதமடைந்த முடி
சமீபத்திய ஆராய்ச்சியின் படி, அரிசி நீரில் இனோசிட்டால் உள்ளது, இது ஒரு வகை கார்போஹைட்ரேட், இது மேற்பரப்பு உராய்வு, சேதமடைந்த செல்கள் மற்றும் முடி நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.