Just In
- 30 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
காளை மாட்டாடோ விந்துவை தலைல தேய்ச்சா எப்பேர்ப்பட்ட வழுக்கையிலும் முடி வளருமாம்...
வழுக்கை தலையில் முடி வளரச் செய்வதற்காக அருவருக்கத்தக்க சில வழிமுறைகளை சில இடங்களில் மக்கள் பின்பற்றுகின்றனர். அதில் காளை மாட்டின் விந்துவும் முக்கியமான ஒன்று. அதுபற்றிய ஒரு சுவாரஸ்யமான தொகுப்பு தான் இ
இன்று தலை முடி வழுக்கை என்பது ஆண்களைப் பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனைப் போக்க பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் பண்டைய கால எகிப்தியர்கள் மற்றும் பழங்கால மக்கள் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும்போது அதிர்ச்சியில் உறைந்து விடுவோம்.
நல்ல வேளையாக இந்த பழக்கங்கள் இப்போது நடைமுறையில் இல்லை. வழுக்கையைப் போக்க பின்பற்றப்பட்ட சில வித்தியாசமான வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காளை மாட்டின் விந்து
முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை, காளை மாட்டின் விந்துக்கள் புரதத்தில் நம்பமுடியாத அளவிற்கு வளமானதாக நம்பப்படுகிறது, இது முடி வளர்ச்சியை ஊட்டி வளர்க்க உதவுகிறது என்று முடி சிகிச்சைக்கான நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதும் யு.எஸ் மற்றும் யு.கேவில் முடி திருத்தகங்களில் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
MOST READ: இந்த 5 பழக்கவழக்கமும் உங்ககிட்ட இருந்தா சீக்கிரமே செத்துடுவீங்க... இனியாவது மாத்திக்கங்க
புறாவின் எச்சம்
தலை முடி வழுக்கைக்கான சிகிச்சையில் புறாவின் எச்சம் பயன்படுத்தப்பட்டதை உங்களால் நம்ப முடிகிறதா? நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படுகின்ற ஹிப்போகிராட்ஸ் புறாவின் எச்சம், அபின், பீட்ரூட், குதிரைமுள்ளங்கி, மற்றும் மசாலாக்களின் கலவை ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்ட ஒரு மருந்தை வழுக்கைக்கான சிகிச்சையாக பரிந்துரைத்திருக்கின்றனர்.
பசுமாட்டு கோமியம்
பசுமாட்டின் சிறுநீர் கோமியம் என்று அழைக்கப்பட்டு இந்தியாவில் பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறுநீர் தலை முடிக்கான சிகிச்சையில் மிகவும் பயனளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த வகை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சிறுநீர் கன்னி மாட்டின் சிறுநீராக இருக்க வேண்டும் என்பது நியதியாகும். இந்த சிறுநீரை எடுத்து, சூரிய உதயத்திற்கு முன் அருந்த வேண்டும். இந்த செயலை எளிதாக்க, ஒரு இந்திய நிறுவனம் ஒரு குளிர்பானத்தை அறிமுகம் செய்தது . இந்த பானத்தில் 5% பசுவின் சிறுநீர் சேர்க்கப்பட்டுள்ளது.
கொதிக்கும் சில்லி சாஸ்
கொரிய ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு 2003 கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், எலிகள் மீது வேகமான விகிதத்தில் முடி வளர மிளகாயில் இருக்கும் காப்சைசின் என்னும் கூறு எப்படி உதவியது என்பதை விஞ்ஞானிகள் விவரித்தனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த பரிசோதனை மனிதர்களுக்கு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேர்மறை பலனைக் கொடுக்கவில்லை.
மிருகங்களின் கொழுப்பை
வழுக்கையைப் போக்க பண்டைய கால எகிப்தியர்கள் ஒரு விசித்திர முறையைக் கையாண்டனர். சிங்கம், காண்டாமிருகம், முதலை, பூனை, பாம்பு, மலையாடு, ஆகிய மிருகங்களின் கொழுப்பை ஒன்றாகக் கலந்து ஒரு மருந்து தயாரித்து அதனை தடவுவதால் வழுக்கை குணமாகிறது என்று ஒரு வித்தியாசமான சிகிச்ச்சை முறையை கடைப்பிடித்து வந்தனர்.
குதிரை பல், சுண்டெலி
இந்த மிக விசித்திர முறையை பின்பற்றி வழுக்கையை போக்க நினைத்தது நம் அனைவருக்கும் தெரிந்த கிளியோபட்ரா . தன் காதலர் ஜூலியஸ் சீசரின் வழுக்கையைப் போக்க அவர் சுண்டெலியை அரைத்து அதனுடன் குதிரை பற்களை சேர்த்து ஒரு மருந்து தயாரித்தார். ஆனால் அந்த மருந்து தகுந்த பலனை அளிக்கவில்லை. அதனால் ஜூலியஸ் தனது வழுக்கையை மறைக்க இலைகளால் செய்த மாலையை தனது தலையில் கிரீடம் போல் வைத்துக் கொள்ளத் தொடங்கினார்..