Just In
- 15 min ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 47 min ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- 2 hrs ago கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 3 hrs ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
Don't Miss
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் இருக்க & பொடுகு தொல்லை இல்லாமல் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
அலோ வேரா மற்றும் கிரீன் டீ அடிப்படையிலான முடி எண்ணெயைப் பயன்படுத்துங்கள். எண்ணெய் தடவினால் போதும், உங்கள் தலைமுடி நன்றாக இருக்கும். எண்ணெய் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
கோடையில் கடுமையான வெப்பத்திலிருந்து மழையின் குளிர்ச்சியை நாம் அனுபவிக்கிறோம். பெரும்பாலான மக்களுக்கு மழைக்காலம் மிகவும் பிடிக்கும். சிலருக்கு மழைக்காலம் என்றாலே பிடிக்காது. ஆனால், ஒவ்வொரு வருடமும் பருவங்கள் மாறும். அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப சரும மற்றும் முடி பராமரிப்பு முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். பொதுவாக மழைக்காலம் நம்மை சோம்பேறியாக உணர வைக்கிறது. இதனால், நாம் நம் முடி பராமரிப்பு வழக்கத்தை கவனிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலும் அது முன்னுரிமைகளின் பட்டியலை தவிர்க்கிறோம். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், சரியான முடி பராமரிப்பு இல்லாததாலும், அது நம் தலைமுடியை வறண்டு, உடைந்து, உதிரச் செய்கிறது.
மேலும், பொடுகு மற்றும் உச்சந்தலையில் அரிப்பை ஏற்படுகிறது. இந்த சீசனில் நம் தலைமுடியை சரியாக பராமரிப்பது மிக அவசியம். ஆதலால், சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். எனவே, மழைக்காலங்களில் முடி சேதத்தை சரிசெய்ய உதவும் வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அலோ வேரா மற்றும் கிரீன் டீ முடி எண்ணெய்
அலோ வேரா மற்றும் கிரீன் டீ அடிப்படையிலான முடி எண்ணெயைப் பயன்படுத்துங்கள். எண்ணெய் தடவினால் போதும், உங்கள் தலைமுடி நன்றாக இருக்கும். எண்ணெய் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. எனவே அதை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது சிறந்தது. வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடிக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது, வேர்களில் இருந்து முடியை வலுப்படுத்த உதவுகிறது. முடி வறட்சியை குறைக்கிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது.
ஹெட் மசாஜ்
15 நிமிட ஹெட் மசாஜ் ஒரு ஸ்பா போன்றது. வாரம் இருமுறை ஹெட் மசாஜ் செய்வது உங்கள் தலைமுடிக்கும் மனதிற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. ஹெட் மசாஜ் உங்கள் உச்சந்தலையில் அதிசயங்களைச் செய்யும் மற்றும் முடி சேதத்தை சரிசெய்ய உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது எண்ணெய் மற்றும் அதன் செயலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் ஊடுருவலை மேம்படுத்துகிறது. எனவே இரத்த ஓட்டம் மற்றும் முடி வளர்ச்சியை எந்த நேரத்திலும் இது அதிகரிக்கிறது.
கடின நீரின் பயன்பாட்டைக் குறைக்கவும்
மழைக்காலத்தில் நீரின் தரம் மோசமடைகிறது. கடின நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஏராளமான தாதுக்கள் உள்ளன. இது முடியில் ஒரு அடுக்கை உருவாக்குகிறது மற்றும் ஈரப்பதத்தை ஊடுருவி தடுக்கிறது. இறுதியில் உங்கள் முடியை சேதப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியை அடிக்கடி அலசுவதை குறைக்கவும். ஏனெனில் கடினமான நீர் அதை உலரச் செய்து, கடுமையான முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். மற்றொரு வழி, கடினமான நீரை வடிகட்டி, சேதத்தைத் தடுக்க வடிகட்டியைப் பயன்படுத்தலாம்.
தலைமுடியை துண்டால் உலர்த்த வேண்டும்
உங்கள் தலைமுடியை ஹேர் ட்ரையரில் உலர்த்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் தலைமுடியை மிகவும் வறண்டதாகவும், உலர்த்தவும் செய்கிறது. இது முடி உதிர்தல் மற்றும் உடைதலுக்கு வழிவகுக்கும். மாறாக டவல்-ட்ரை முறையைப் பயன்படுத்தவும். உங்கள் தலைமுடியை அலசிய பிறகு உலர்த்துவதற்கு மைக்ரோ-ஃபைபர் டவல் பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் ஈரமான தலைமுடியை வேகமாக தேய்ப்பதற்குப் பதிலாக மெதுவாகப் பிழிந்து, தலைப்பாகையாக மடித்து, லேசாக கட்டிக்கொள்ளவும்.
சரியான சீப்பை பயன்படுத்தவும்
குறிப்பாக ஹேர் வாஷ் செய்த பிறகு முடியை சீவ முயற்சிக்கும் போது சிக்கல்கள் கடுமையான முடி சேதத்திற்கு வழிவகுக்கும். உங்கள் ஈரமான முடி மிகவும் உடையக்கூடியது மற்றும் அதை அதிகமாக சீவுவது முடி உடைவுக்கு வழிவகுக்கிறது. ஜேட் சீப்பு, மரத்தாலான சீப்பு அல்லது அகலமான பல் சீப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி உங்கள் தலைமுடியை சீவுங்கள். அதற்கு முன்பு உங்கள் முடியை துடைத்து உலர்த்துவது நல்லது. முடியை நன்றாக மெதுவாக சீவுங்கள்.