Just In
- 3 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 4 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...
சிலர் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஒருசில தவறுகளை தெரியாமல் செய்து வருவார்கள். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாழாவதோடு, அதன் வளர்ச்சியும் தடுக்கப்படும்.
ஒருவரது அழகில் தலைமுடியும் முக்கிய பங்காற்றுகிறது. அனைவருமே நல்ல ஆரோக்கியமான முடியை விரும்புவோம். அதற்கு தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்தால் மட்டும் போதாது, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தூக்க நேரம் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். ஒருவர் அதிகமாக மன அழுத்தம் கொண்டால், அது நேரடியாக தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
சிலர் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஒருசில தவறுகளை தெரியாமல் செய்து வருவார்கள். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாழாவதோடு, அதன் வளர்ச்சியும் தடுக்கப்படும். எனவே நல்ல ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடி வேண்டுமானால், முதலில் நமக்கு இருப்பது எந்த வகையான தலைமுடி மற்றும் அதை எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம், எந்த மாதிரியான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
கீழே தலைமுடியின் வளர்ச்சியைத் தடுக்கும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த விஷயங்கள் எவையென்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்திடுங்கள்.
அதிகமாக தலைக்கு குளிப்பது
அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் தெரிய வேண்டும் என்பதற்காக பலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள் மற்றும் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பார்கள். ஆனால் இது மிகப்பெரிய தவறு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது தலைமுடியை சேதப்படுத்தி, தலைமுடி உதிர வழிவகுக்கும். அதோடு தலைக்கு அடிக்கடி குளித்தால், அது தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெயை வெளியேற்றி, முடியை பொலிவிழந்தும், ஆரோக்கியமற்றதாகவும் காட்டும்.
அதிகளவிலான வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவது
தற்போது மக்கள் தலைமுடிக்கு வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கர்லர், ஹேர் ட்ரையர் போன்றவை தலைமுடியின் அமைப்பை சேதப்படுத்தும். மேலும் அது முடியின் முனைகளில் வெடிப்புக்களை உண்டாக்கி, முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே இம்மாதிரியான கருவிகளை அதிகம் உபயோகிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
ஈரமான முடியை சீவுவது
எப்போதும் ஈரமான தலைமுடியை சீவக்கூடாது. எப்போதும் முடி நன்கு காய்ந்த பின்பே தலைமுடியை சீவ வேண்டும். ஈரமான முடியானது எளிதில் உடையும். அதேப் போல் ஈரமான முடியை இறுக்கமாக கட்டக்கூடாது. இல்லாவிட்டால் முடி அதிகம் உடைந்து, தலைமுடியின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.
தவறான வழியில் கண்டிஷனரைப் பயன்படுத்துவது
சிலர் கண்டிஷனரைப் பயன்படுத்தவே மாட்டார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. எப்போதுமே முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் போது, கண்டிஷனரை முடியில் மட்டும் படுமாறு, ஸ்கால்ப்பில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். ஸ்கால்ப்பிற்கு கண்டிஷனரைப் பயன்படுத்தினால், அது முடி உதிர்தலுக்கு வழிவகுத்து, நாளடைவில் முடியின் வளர்ச்சியையே தடுத்துவிடும்.
துணியால் முடியை தேய்ப்பது
தலைக்கு குளித்த பின் பலர் தலைமுடியை உலர்த்துவதற்கு, துணியால் தலைமுடியை தேய்த்து துடைப்பார்கள். இது முற்றிலும் தவறான பழக்கம். தலைமுடியை எப்போதுமே தேய்த்து உலர்த்தக்கூடாது. அப்படி தேய்த்தால், துணியுடன் முடி உரசும் போது, அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஆகவே ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமானால், இந்த செயலை தவிர்த்திடுங்கள்.