Just In
- 1 hr ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 1 hr ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 3 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நரைமுடியை மீண்டும் கருகருவென மாற்றிவிடும் கற்பூரம்... எப்படி பயன்படுத்த வேண்டும்?
நரைமுடி இப்போது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. எளிமையான சில குறிப்புகள் இங்கே கொடுத்துள்ளோம். அதை பயன்படுத்தி உங்கள் முடியை கருமையாக மாற்றிக் கொள்ளுங்கள்.
இளநரையை போக்க கற்பூரத்தை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியுமா? வாங்க சொல்றேன். சில பேர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்து அழகை கெடுக்க ஆரம்பித்து விடும். அவர்களும் சாயங்கள், டை என்று தங்கள் நரைமுடியை மறைக்க முயன்றாலும் மிஞ்சுவது என்னவோ சிரமமாகத்தான் இருக்கும். ஆமாங்க இயற்கையாக ஏற்பட்ட நரைமுடியை செயற்கையாக மறைப்பது ஒண்ணும் அவ்வளவு சுலபமான காரியமல்ல. எனவே இதற்கு நாம் இயற்கையான வழியைத் தான் நாம் நாடிச் செல்ல வேண்டும்.
இந்த இளநரையை போக்க நிறைய வழிகள் இருந்தாலும் பக்க விளைவுகள் இல்லாத இயற்கை முறை தான் இது. இதை வீட்டில் இருந்த படியே எளிதாக நீங்கள் செய்யலாம். இதற்கு உங்கள் கையில் கற்பூரம் இருந்தால் போதும்.
இளநரை ஏற்படக் காரணங்கள்
கெமிக்கல்கள்
நிறைய கெமிக்கல்களை நம் தலைக்கு பயன்படுத்தும் போது நரைமுடி ஏற்படுகிறது. உங்கள் முடியை கலராக்க பயன்படுத்தும் அனைத்து கெமிக்கல்கள் நிறைந்த சாயங்களும் உங்கள் தலை முடியை பாதிக்கின்றன. எனவே கெமிக்கல்கள் கலந்த சாம்பு, ஹேர் டை, ஹேர் கண்டிஷனர் போன்றவற்றை தவிருங்கள்.
உணவுப் பழக்கம்
உங்கள் தலைமுடி இளமையிலேயே நரையாக மாற உங்கள் உணவுப் பழக்கமும் ஒரு காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் உள்ளே ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் தான் வெளியே இளநரை இல்லாத ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்.
MOST READ: நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடுவது என்னென்ன நன்மை தரும்?
மன அழுத்தம்
இளநரை ஏற்பட மற்றொரு காரணம் மன அழுத்தம். எனவே பரபரப்பான வாழ்க்கை முறையை தவிர்த்து மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியாக வாழ வேண்டும். ஜங்க் ஃபுட், ஆல்கஹால் போன்றவையும் இளநரைக்கு முக்கிய காரணம்.
மெலானின் பற்றாக்குறை
திடீரென்று தலையில் உள்ள மெலானின் நிறமி உருவாக்கம் தடை பெறுவதால் இளநரை ஏற்படுகிறது. இதுவும் ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும், போதிய போஷாக்குகள் கூந்தலுக்கு இல்லாததாலும் ஏற்படுகிறது.
தடுப்பது எப்படி?
இளநரையை சில வழிகளை நாம் கடைபிடிப்பதன் மூலம் தடுக்கலாம்.
கூந்தலுக்கு பொருத்தமான அதிக கெமிக்கல்கள் இல்லாத சாம்புவை தேர்ந்தெடுத்து பயன்படுத்துதல்
இளநரையை மாற்றும் மருத்துவ சிகிச்சையான ரீ பிக்மெண்டேஷன் தெரபி, ஹார்மோன் தெரபி போன்ற முறைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இவற்றை விட இயற்கையான வழி மிகவும் சிறந்தது.
அப்படி பார்க்கையில் இந்த இளநரையை தடுப்பதில் கற்பூரம் சிறந்த பங்காற்றுகிறது. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
கற்பூர சிகிச்சை
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
4 செம்பருத்தி பூ
2 கற்பூர துண்டுகள்
MOST READ: வீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டியது லட்சுமி மந்திரங்கள்
செய்முறை
ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
தேங்காய் எண்ணெய் சூடானதும் செம்பருத்தி பூ சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
இப்பொழுது கற்பூர துண்டுகளை அதில் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் இந்த கலவையை ஆற விடுங்கள். ஆறிய பிறகு இதைக் கொண்டு தலையை நன்றாக மசாஜ் செய்யவும்.
இந்த முறையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இளநரை கூடிய விரைவில் மறைந்தே போய்விடும்.
வேலை செய்யும் விதம்
கற்பூரத்தில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. இவை பேன்கள், முடி உதிர்தல், இளநரை இவற்றிற்கு எதிராக செயல்படுவதோடு கூந்தலுக்கு வலிமை கொடுக்கிறது.
மயிர்க்கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூந்தல் மென்மையாக ஆரோக்கியமாக பட்டு போல் இருக்க உதவுகிறது.
இந்த எளிய வீட்டு முறையை நீங்கள் மேற்கொண்டு உங்கள் இளநரை க்கு பை பை சொல்லுங்கள்.