Just In
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 3 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..!
நம்மில் பலருக்கு நீண்ட நாட்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் சில வகையான பூக்களில் உள்ள அழகியல் ரகசியங்களை பற்றி பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு நீண்ட நாட்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. அழகு என்பது முகத்தை மட்டும் குறிக்கும் வார்த்தையாக இன்றளவும் நாம் எண்ணி கொள்கிறோம். அழகு எப்போதும் உடல் ஆரோக்கியத்தையும், உள்ளத்து ஆரோக்கியத்தையும் பொருத்தே கணிக்கப்படும். முக அழகு மிகவும் பொலிவாக மற்றவரை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று நம் அனைவருக்கும் இருக்கும் விருப்பம்தான்.
அத்துடன் தலை முடிகளும் மிக அழகாக கருமையாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் ஆசையாகத்தான் இருக்கிறது. இதை அடைய பல வழிகள் இருந்தாலும், இயற்கையான வழிகளே நல்ல பலனை நீண்ட காலத்திற்கு தரும். இந்த பதிவில் சில வகையான பூக்களில் உள்ள அழகியல் ரகசியங்களை பற்றி பார்க்கலாம்.
சீமை சாமந்தி :-
தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சீமை சாமந்தி ஒரு நல்ல மருந்தாகும். சீமை சாமந்தியை டீ போட்டு குடித்து வந்தால் பல தலை முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதில் உள்ள Apigenin என்ற நிறமி நரை முடிகளில் இருந்து உங்களை காக்கும். இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. தலையில் உள்ள அதிக பொடுகை இந்த டீ நீக்குகிறது.மேலும் கூந்தலை பொலிவாக இருக்கவும் செய்கிறது.
செம்பருத்தி :-
முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக இது செயல்படும். செம்பருத்தியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் முடி உதிர்வை முழுமையாக தடுக்கிறது. அத்துடன் இளநரைகளை முற்றிலுமாக குணப்படுத்துகிறது. இதனை டீ போன்றும் எடுத்து கொள்ளலாம். முடியின் அடிவேரை உறுதி படுத்த இந்த டீ நல்ல தீர்வாகும்.
சங்கு பூ :-
பல மருத்துவ பயன்களை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறது இந்த அற்புத பூ. நாம் அவ்வளவாக இந்த பூவை பயன்படுத்த மாட்டோம் என்றாலும் இதில் உள்ள அழகு குறிப்புகள் ஏராளம். தலையில் ஏதேனும் அரிப்பு ஏற்பட்டு புண் வந்தால், சங்கு பூவை கசக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விரைவிலே குணமடையும்.
சாமந்தி பூ :-
முக அழகிற்கு இந்த பூ பெரிதும் பயன்படுகிறது. சருமம் அதிகம் பொலிவுடன் இருக்க இந்த பூக்களில் இருந்து தயாரித்த டீ ஒன்றே போதும். சாமந்தி பூவை டீ போன்று அருந்தினால் சரும வறட்சியை சரி செய்யும். மேலும் சூரியனின் வெயிலால் ஏற்பட்ட அரிப்புகள் குணமடையும்.
ரோஜா :-
முக அழகை அழகுபடுத்த முதல் இடத்தில் இருப்பது இந்த ரோஜாதான். முகத்தின் அழகை இது பெரிதும் பாதுகாக்கிறது. ரோஜா இதழை நீரில் கொதிக்க விட்டு, அந்த நீரை மட்டும் ஓட்ஸுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் மிகவும் மென்மையாக காட்சியளிக்கும். அத்துடன் முக பருக்கள் வருவதையும் தடுக்கும்.
லாவெண்டர் :-
முகத்தை பொலிவாக மாற்ற லாவெண்டர் பெரிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள மூல பொருட்கள் சரும அழகிற்கு அதிகம் உதவுகிறது. இதனை 5 நிமிடம் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும். அதன்பின் ஓட்ஸுடன் இந்த நீரை கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முகம் பட்டுபோல மின்ன வழி செய்யும்.
மல்லிகை :-
இத்தனை நாள் நாம் மல்லிகையை தலையில் அழகு செய்ய மட்டுமே வைத்திருப்போம். ஆனால், இதற்குள் இருக்கும் அழகு ரகசியத்தை நாம் அறியாமல் இருந்திருப்போம். மல்லிகை பூவை நேரடியாக முகத்தில் அப்ளை செய்தால் முகம் சுருக்கம் அடையாமல் இருக்கும். மேலும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க உதவும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.