Just In
- 22 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்கள் கால்களில் துர்நாற்றம் வீசுகிறதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!
தற்போது வெயில் கொளுத்துவதால், ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் வியர்வை. என்ன தான் வியர்வை ஒரு மணமற்ற திரவமாக இருந்தாலும், இது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் சேர்ந்து துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன.
அதிலும் கால்களில் ஷூ போடுபவர்களின் பாதங்களை எடுத்துக் கொண்டால், எலி இறந்து போன நாற்றம் வீசும். இதனைத் தடுக்க தினமும் ஒருசில செயல்களை மாலையில் வீடு வந்ததும் செய்தால் போதும்.
இங்கு பாதங்களில் வியர்வையினால் வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
1/2 வாளி நீரில் 1/4 கப் பேக்கிங் சோடாவை போட்டு கலந்து, அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, அக்கலவையில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
வினிகர்
வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், பாக்டீரியாக்களை அழித்து, துர்நாற்றத்தைத் தடுக்கும். அதற்கு 1/2 கப் வினிகரை 8 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, பாதங்களை அந்நீரில் 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
லாவெண்டர் எண்ணெய்
1/2 வாளி நீரில் சில துளிகளில் லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலந்து, 15-20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, பாதங்களில் இருந்து வீசும் துர்நாற்றம் தடுக்கப்படும்.
படிகாரம்
1/2 வாளி வெதுவெதுப்பான நீரில் சிறிது படிகாரத்தைப் போட்டு, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் கால்களில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.
ஐசோப்ரோபைல் ஆல்கஹால் மற்றும் சர்க்கரை
இது மிகவும் பிரபலமான ஓர் முறை. அது 1/4 கப் ஐசோப்ரோபைல் ஆல்கஹாலில், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, அக்கலவையைக் கொண்டு கால்களை 10-15 நிமிடம் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, பாத துர்நாற்றம் தடுக்கப்படும்.
கல் உப்பு மற்றும் தண்ணீர்
1 கப் கல் உப்பை 10-12 கப் நீரில் போட்டு, அந்நீரில் பாதங்களை 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால், கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறுவதோடு, துர்நாற்றமும் தடுக்கப்படும்.
ஓட்ஸ் ஸ்கரப்
2 டீஸ்பூன் ஓட்ஸை 1 கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, பாதங்களை 15-20 நிமிடம் ஸ்கரப் செய்து, பின் கழுவ, பாதங்கள் சுத்தமாகி, துர்நாற்றம் வீசுவதும் தடுக்கப்படும்.