குருவும், செவ்வாயும் வக்ரமாக இருப்பதால் 2025-ன் தொடக்கத்தில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...

Jupiter Mars Retrograde In New Year 2025: வேத ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். அதேப் போல் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.

இந்த செவ்வாய் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பரில் இந்த செவ்வாய் கடகத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இவ்விரு கிரகங்களும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வக்ர நிலையில் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Jupiter Mars Retrograde In New Year 2025 These Zodiac Signs Should Be Careful

குறிப்பாக இவ்விரு கிரகங்களின் வக்ர நிலையால் சில ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் அதிர்ஷ்டமாகவும், இன்னும் சிலருக்கு பல பிரச்சனைகளை தரக்கூடியதாகவும் இருக்கலாம். இப்போது குரு செவ்வாய் வக்ர நிலையால் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் குருவும், 4 ஆவது வீட்டில் செவ்வாயும் வக்ர நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களின் மகிழ்ச்சி குறையலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் வரலாம். வேலை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். இதன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். வியாபாரிகள் எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும், நன்கு சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். மேலும் போட்டியாளர்கள் கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். தேவையற்ற செலவுகள் தொந்தரவு செய்யும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியின் முதல் வீட்டில் குருவும், 3 ஆவது வீட்டில் செவ்வாயும் வக்ர நிலையில் இருப்பதால், இந்த ராசிக்கார்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் சற்று கவனமாக இல்லாவிட்டால், பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, பெரிய நிதி இழப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டில் குருவும், 12 ஆவது வீட்டில் செவ்வாயும் வக்ரமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் நிறைய அழுத்தத்தை உணரலாம். சிலர் வேலையை மாற்ற முடிவெடுக்கலாம். மேலும் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளால் அதிகம் சிரமப்படுவீர்கள். காதல் வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 26, 2024, 16:48 [IST]
Desktop Bottom Promotion