இந்தியாவின் பல முக்கியமான நகரங்களுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. வரலாறு, கலாச்சாரம் அல்லது புவியியல் அமைப்பின் அடிப்படையில் தனித்துவமான புனைபெயர்களால் அறியப்படும் பல நகரங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவின் இந்த புனைபெயர்களுக்கு ஆங்கிலேயர்களின் ஆட்சியையும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தகைய மிகவும் பிரபலமான புனைபெயர்களில் ஒன்று 'இந்தியாவின் லண்டன்' என்பதாகும்.
லண்டன் என்பது உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் நீண்ட வராலற்றைக் கொண்ட ஒரு மிகப்பெரிய நகரமாகும். இந்தியாவின் எந்த நகரம் இந்த சிறப்புகளைக் கொண்டுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவலாகும். காலனித்துவக் காலக் கட்டிடக்கலை, பிரிட்டிஷ் ஆட்சிக்காலக் கட்டிடங்கள் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக நீண்ட காலம் திகழ்ந்த வரலாறு ஆகியவற்றின் காரணமாக இந்நகரம் இப்பெயரைப் பெற்றது. இந்த பதிவில் இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் பெருமைவாய்ந்த நகரம் எதுவென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் 'லண்டன்' என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது?
இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படும் நகரம் மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தா ஆகும். பிரிட்டிஷ் ஆட்சியின் வலுவான தாக்கம் காரணமாக, கொல்கத்தா 'இந்தியாவின் லண்டன்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த் நகரம் அதன் வரலாற்றுப் பின்னணியைக் குறிக்கும் வகையிலான காலனித்துவ காலக் கட்டிடங்கள், தேவாலயங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை இன்றும் பாதுகாத்து வருகிறது.
கொல்கத்தா ஏன் 'இந்தியாவின் லண்டன்' என்று அழைக்கப்படுகிறது?
கொல்கத்தா இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. 1772 முதல் 1911 வரை இது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது. இந்நகரில் விக்டோரியன் பாணியிலான பல கட்டிடங்கள் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொல்கத்தாவை ஒரு நிர்வாக மையமாக உருவாக்கினர். இங்குள்ள சாலைகளும் நினைவுச் சின்னங்களும் லண்டனில் உள்ளவற்றை ஒத்திருக்கின்றன. காலனித்துவ ஆட்சியின் போது, இந்நகரம் வர்த்தகம், கல்வி மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
விக்டோரியா நினைவகம்
விக்டோரியா நினைவகம் கொல்கத்தாவில் உள்ள மிகவும் பிரபலமான பிரிட்டிஷ் ஆட்சி கால நினைவுச் சின்னமாகும். இது ராணி விக்டோரியாவின் நினைவாகக் கட்டப்பட்டது. இது வெள்ளை நிற மக்ரானா பளிங்குக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 1921-ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்ட இது, தற்போது ஒரு புகழ்பெற்ற அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகிறது.
ரைட்டர்ஸ் கட்டிடம்
ரைட்டர்ஸ் கட்டிடம் கொல்கத்தாவின் மிகப் பழமையான அரசு கட்டிடங்களில் ஒன்றாகும். இது 1777-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதிகாரத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்ட இக்கட்டிடம், பல ஆண்டுகளாக மாநில அரசின் தலைமைச் செயலகமாகச் செயல்பட்டது. இந்த கட்டிடம் அதன் சிவப்பு நிறத்திலான காலனித்துவக் கட்டிடக்கலை பாணிக்காகப் புகழ் பெற்றது.
செயின்ட் பால்ஸ் கதீட்ரல்
இந்தியாவின் மிக அழகான தேவாலயங்களில் செயின்ட் பால்ஸ் கதீட்ரல் தேவாலயமும் ஒன்றாகும். இது 1847-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது கோதிக் (Gothic) கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது. இது இந்தியாவில் உள்ள மிகப் பழமையான ஆங்கிலிக்கன் ஒன்றாகும் கதீட்ரல்களில் ஒன்றாகும்.
ஃபோர்ட் வில்லியம்
ஃபோர்ட் வில்லியம் என்பது பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் கட்டப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இது ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மூன்றாம் வில்லியம் மன்னரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது தற்போது இந்திய ராணுவத்தின் 'கிழக்குக் கட்டளைப் பிரிவின்' தலைமையகமாகச் செயல்பட்டு வருகிறது.
ஹவுரா பாலம்
ஹவுரா பாலம் கொல்கத்தா மட்டுமின்றி இந்தியாவின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். இது 1943-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது கொல்கத்தாவையும் ஹவுராவையும் இணைக்கிறது. இது உலகின் மிகவும் பரபரப்பான கேன்டிலீவர் பாலங்களில் ஒன்றாகும்.
ஆங்கிலேயர்களின் பல்வேறு கட்டமைப்புகளும், கலாச்சார சின்னங்களும் இன்றும் இந்தியாவின் அடையாளங்களாக உள்ளன. அதனால்தான் இந்த நகரம் இந்தியாவின் லண்டன் என்று அழைக்கப்படுகிறது.
More Articles
- Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும்
- பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க
- 800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா?
- 52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா?
- வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா?
- இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா?