நாடி ஜோதிடம் என்பது இந்தியாவில் தொடங்கப்பட்டு பின் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதன் மீது ஆர்வத்தை வளர்த்து கையில் உள்ள கோடுகளை கொண்டு ஒருவருடைய வாழ்க்கையை கணிக்கும் முறையை வகுத்தார்கள். நாடி ஜோதிடத்தில் ஒருவவரின் கைரேகைக்கு ஏற்ப அவருடைய கடந்த மற்றும் எதிர்காலங்கள் அனைத்தும் அவர் கைகளில் எழுதப்பட்டிருக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளது.
உங்கள் கை ரேகைகள் உங்கள் எதிர்காலம் பற்றி என்ன கூறுகிறது?
உங்கள் கைகளில் உள்ள வரிகளை படித்தாலே உங்களின் எதிர்காலத்தையும் இந்த பிறவியில் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பதையும் கண்டுபிடித்து விடலாம். உங்கள் கைகளில் உள்ள உங்களின் எதிர்காலத்தை படிக்க இயலாதவர்கள
உங்கள் கைகளில் உள்ள வரிகளை படித்தாலே உங்களின் எதிர்காலத்தையும் இந்த பிறவியில் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பதையும் கண்டுபிடித்து விடலாம். உங்கள் கைகளில் உள்ள உங்களின் எதிர்காலத்தை படிக்க இயலாதவர்களுக்கு அதனை எப்படி படிக்க வேண்டும் என்ற குறிப்புகளுடன் நாங்கள் வந்துள்ளோம்.
உங்களுடைய எதிர்காலத்தை அறிந்துகொள்ள கைரேகைகளை படிக்க கற்றுக்கொள்வதற்கு முன் நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் வேலை தொடர்பான வாழ்க்கை, உங்களை உலகிற்கு காண்பிக்கும் ரேகைகளை உள்ள சரியான கையை தேர்வு செய்ய வேண்டியதுதான். மற்றொரு காய் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையும், உறவுகளையும் குறிப்பதாக இருக்கும்.
கைரேகை பார்ப்பதில் நம் அனைவருக்கும் நம்பிக்கை இருந்தாலும் இது அனைவருக்கும் முழுமையாக உண்மையாக இருக்காது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். நம் கையில் உள்ள கோடுகள் காலத்திற்கேற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். எனவே அடிக்கடி உங்கள் கையில் உள்ள கோடுகளை படிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆயுள் ரேகை உங்களுடைய உணர்வு மற்றும் உடல் வலிமையை குறிக்கிறது. ஒருவேளை உங்கள் ஆயுள் ரேகை நீளமாக இருந்தால் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று அர்த்தமல்ல. மாறாக இது உங்களின் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் வாழும் சூழ்நிலையின் மாற்றத்தை குறிக்கும். இது பொதுவாக உங்கள் கையின் கீழ் பகுதியில் தொடங்கி குறியீட்டு விரல் மற்றும் உங்கள் மணிக்கட்டை நோக்கி இருக்கும்.
ஒருவேளை உங்கள் ஆயுள்ரேகை தடிமனாகவும், திடமாகவும் இருந்தால் நீங்கள் வலிமையானவராக இருப்பீர்கள், அதேசமயம் எப்பொழுதாவதுதான் நோய் உங்களை தாக்கும். அதேநேரம் உங்களுடைய நோயெதிர்ப்பு திறன் மிக அதிகமாக இருக்கும்.
MOST READ: ஆண்களே ஜாக்கிரதை! இந்த 6 காரணங்களால் ஆண்குறி உணர்ச்சியற்று போகலாம்!
உங்கள் ஆயுள்ரேகை உடைந்து இருந்தால் இந்த சமூகத்தால் அதிக மனஅழுத்தத்தை அனுபவிப்பவராக இருப்பீர்கள். அதேசமயம் உங்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளும் நிறைய இருக்கும்.
உங்கள் ரேகை இப்படி இருந்தால் நீங்கள் தன்னம்பிக்கை குறைந்தவராகவும், எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் உங்களை சுற்றி உள்ளவராகவும் இருப்பீர்கள். எந்த முடிவாக இருந்தாலும் அதனை எடுப்பதர்க்கு முன் தீவிரமாக யோசிக்க வேண்டும். உங்களுடைய பெரும்பாலான முடிவுகள் அவசரத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும்.
உங்கள் ரேகை இவ்வாறு இருந்தால் நீங்கள் சுய- உற்சாகமுடையவராக இருப்பீர்கள். உங்களுக்கு பரிவு உணர்வானது சில சமயம் குறைவாக இருக்கும்.
இந்த விதி கோடானது " தலைவிதியின் கோடு " எனவும் அழைக்கப்படுகிறது. கோடு கையின் அடிப்பகுதியில் இருந்து தொடங்கி அல்லது சில சமயம் நடுவில் இருந்தும் தொடங்கி மணிக்கட்டில் முடிவடையும். இது நடுவிரலை நோக்கி செல்கிறது.
இந்த ரேகை பலமாகவும், தீர்க்கமாகவும் இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீங்கள் தொடங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியில்தான் முடியும்.
உங்கள் ரேகை இவ்வாறு இருப்பின் நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களை நம்பி இருப்பவராகவே இருப்பீர்கள். இல்லையெனில் எப்பொழுதும் மற்றவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருப்பீர்கள்.
வெவ்வேறு இடங்களில் தொடங்கும் இரண்டு விதி ரேகைகள் உங்கள் கையில் இருந்தால், நீங்கள் மிகவும் சிறப்பானவராக இருப்பீர்கள். உங்களால் அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாகவும் பார்க்க முடியும் அதேசமயம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும் முடியும்.
இதய கோடானது உங்கள் கையின் பக்கவாட்டில் தொடங்கி ஆட்காட்டி விரல் நோக்கி பயணிக்கும். இது உங்களுடைய காதல் உணர்வையும் நீங்கள் அன்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் குறிக்கும்.
ஒருவேளை உங்கள் இதயக்கோடு பாதியிலிருந்து தொடங்கினால்உங்களுக்கு சுமாரான மனவலிமையும், தடுமாறும் மனநிலையும் இருக்கும். ஒரு தனிநபராக நீங்கள் கடினமாக உழைக்கக்கூடியவர். அதேபோல ஒரு தனிநபராக உங்கள் இதயம் நொறுங்குவதை எளிதாக சமாளிக்க முடியும்.
இதயக் கோடு உங்கள் சுண்டுவிரலுக்கு நெருக்கமாக இருந்தால், நீங்கள் தனிப்பட்ட சீரான காதல் வாழ்க்கை வாழ்கிறீர்கள், அதேநேரம் அதை உலகிற்கு வெளிக்காட்ட மறுக்கிறீர்கள். புதிய உறவில் ஈடுபட நீங்கள் ஆர்வம் காட்டமாட்டிர்கள், ஒரு உறவில் இணைந்துவிட்டால் அதில் இறுதிவரை உறுதியக வாழ்வீர்கள். உங்கள் நேரத்தை செலவிட புதிய பொழுதுபோக்குகளை முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் ரேகை இவ்வாறு இருந்தால் நீங்கள் பணிவானாவராகவும், சுயநலமற்றவராகவும் இருப்பீர்கள். இது மிக உயர்ந்த பண்பாக கருதப்படுகிறது. அதேசமயம் நீங்கள் யாரை வேண்டுமானாலும் எளிதில் நண்பர்களாக்கி விடுவீர்கள்.
MOST READ: கண்கள் துடிப்பதை சாதாரணமா எடுத்துக்காதீங்க... அது எதோட அறிகுறின்னு தெரியுமா?
இது உங்களுடைய மூளையின் சக்தி மற்றும் உத்வேகத்தை குறிக்கிறது. உங்களின் சிந்தனைகளை பற்றி கூறும் கோடாக இது கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி இது உங்களின் காலஅளவை காட்டுவதற்கும் உதவுகிறது. இந்த கோடு உங்கள் இதயக்கோட்டிற்கு மேலாக இருக்க வேண்டும். இது கட்டை விரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் அமைந்து கை முழுவதும் பரவி உள்ளது.
இவ்வாறு இருந்தால் நீங்கள் பாதுகாப்பற்றதாகவும், எதிர்மறையாகவும் உணருவீர்கள். அதேநேரம் ஸ்திரத்தன்மை மிக்கவராகவும் இருப்பீர்கள்.
உங்கள் ரேகை இவ்வாறு இருந்தால் நீங்கள் மற்றவர்களின் பார்வைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் தலையீடு உங்கள் வாழ்க்கையில் அதிகம் இருக்கும்.
வெவேறு இடங்களில் இருந்து இரண்டு தலைமை கோடுகள் தொடங்குமானால் ஒரு தனிப்பட்ட நபராக நீங்கள் புத்திசாலியாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்பராகவும் இருப்பீர்கள்.
இது நீங்கள் எவ்வளவு அன்பானவராகவும், எதிரிபாலினத்தை வசீகரிக்க கூடியவராகவும் இருக்கிறீர்கள் என்பதை குறிக்கும். இந்த ரேகை நீங்கள் மற்றவர்களுடன் எவ்வளவு வலிமையான தொடர்பை ஏற்படுத்தி கொள்வீர்கள் என்பதையும் குறிக்கும். இது விதி கோடுக்கு அடிப்பகுதியில் இருந்து தொடங்கும்.
வெவ்வேறு இடத்தில் இருந்து தொடங்கும் இரண்டு காதல் ரேகைகள் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் எதிர்பாலினத்தை கவர தகுதியற்றவர்கள் என்று அர்த்தம் .
MOST READ: கனவில் பெண்கள் வந்து எந்தெந்த செயல்கள் செய்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
உங்கள் காதல் ரேகை நேராகவும், வலிமையாகவும் இருந்தால் நீங்கள் உங்களின் துணையால் அதிகம் விரும்பப்படுவீர்கள்.
உங்கள் காதல் ரேகை மெலிதாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒருவரை விரும்ப வைப்பதற்காக பெரிய முயற்சிகள் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் காதல் ரேகை மெலிதாகவோ அல்லது இல்லாமலோ இருந்தால் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒருவரை விரும்ப வைப்பதற்காக பெரிய முயற்சிகள் எடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் குறியீட்டு விரலுக்கு கீழ் இருக்கும் ரேகை பணம் அல்லது புகழ் ரேகை என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய மேட்டில் இருந்து தொடங்கி மோதிர விரலை நோக்கி மேலே செல்லும்.
உங்களுடைய ரேகை இவ்வாறு இருந்தால் உங்களுக்கு பணம் பற்றிய கவலை குறைவாக இருக்கும். நீங்கள் எதிர்காலத்திற்காக பணத்தை சேகரிக்கும் பழக்கம் உடையவராக இருப்பீர்கள்.
இவ்வாறு ரேகை இருப்பின் உங்களுக்கு பணம் மீதான பற்று மிகக்குறைவாக இருக்கும். அதே நேரம் நீங்கள் கடுமையாக உழைக்க கூடியவராக இருப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெருகிறோமோ என்பதில் அக்கறை இல்லாமல் இருப்பீர்கள்.
உங்களுக்கு பல சிறிய பண ரேகைகள் இருந்தால் நீஙகள் பண விஷயத்தில் மிகவும் அஜாக்கிரதையாக இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ சற்றும் யோசிக்காமல் பணத்தை செலவு செய்வாராக இருப்பீர்கள்.
உங்கள் ரேகை இவ்வாறு இருப்பின் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். செல்வந்தராக வேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்.
இவ்வாறு இருப்பின் நீங்கள் உங்களுடைய குடும்ப தொழிலை வெற்றிக்கரமாக செய்யக்கூடியவர் அல்லது பரம்பரை சொத்துக்களை பெற கூடிய அதிர்ஷ்டமுடையவர்.
இது உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை குறிக்கும். இது இதய ரேகைக்கும் சுண்டு விரலுக்கு நடுவிலும் காணப்படும்.
உங்கள் கல்யாண ரேகை மேல்நோக்கி சென்றால் நீங்கள் மகிழ்ச்சியானவராக இருப்பீர்கள். சிறப்பான திருமண வாழ்க்கை உங்ககுக்காக காத்திருக்கிறது. ஒருவேளை திருமணம் ஆகாதவராக இருந்தால் நீங்கள் கனவு கண்டபடி திருமணம் நடக்கும்.
இப்படி இருப்பின் உங்கள் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பீர்கள் அல்லது எளிதில் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள் எழும். ஒருவேளை திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு காதல் மற்றும் திருமணத்தில் நம்பிக்கை இருக்காது.
இவ்வாறு இருப்பின் உங்களுக்கு விவாகரத்து நடக்க பல வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் பல தோல்விகளை சந்திப்பீர்கள்.
More ZODIAC News
- 300 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரி நாளில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்!
- இந்த 4 ராசிக்காரங்க கவலையற்ற வாழ்க்கையை வாழுவாங்களாம்... நீங்களும் இவங்ககூட சேர்த்து மகிழ்ச்சியா இருங்க!
- இந்த 4 ராசி பெண்கள் கனவுலகில் வாழ்பவர்களாம்... இவங்க உங்க வாழ்க்கையில வந்தா? ரொம்ப நல்லா இருக்குமாம்!
- இந்த 5 ராசி பெண்கள நீங்க திருமணம் பண்ணா? உங்க வாழ்க்கையையே அழகாக மாத்திருவாங்களாம் தெரியுமா?
- இந்த 4 ராசிக்காரங்க உறவில் நெருக்கமா இருக்கத்தான் அதிகம் விரும்புவாங்களாம்... உங்க ராசி என்ன?
- இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழந்தைங்கனா உயிராம்... அவங்களோட இருக்குறதுக்காக என்ன வேணாலும் செய்வாங்களாம்!
- இந்த 5 ராசிக்காரங்கள சமாதானம் பண்ணுறது ரொம்ப கஷ்டமான வேலையாம்... ஏன் தெரியுமா?
- இந்த 4 ராசிக்காரங்களுக்கு நிறைய திறமையை கடவுள் கிஃப்ட்டா கொடுத்து இருக்கிறாராம்... உங்க ராசி என்ன?