பிறர் மனைவி மீது ஆசை கொள்ளுதல் என்பது மிகவும் மோசமான விஷயமாகும். தர்மத்தின் படியும் சரி, கலாச்சாரத்தின் அடிப்படையிலும் சரி இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகும். ராமாயணம் என்ற இந்தியாவின் மாபெரும் இதிகாசத்திற்கு ஆரம்பப் புள்ளியே இதுதான். ஆனால் பிறர் மனைவியை கவர்வது ஒரு அனுமதிக்கப்பட்ட சடங்காக சில கலாச்சாரங்களில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

Advertisement

"மனைவியைக் கடத்துதல்" அல்லது மணப்பெண் கடத்தல் என்பது மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு தனித்துவமான பாரம்பரியம் மற்றும் பெரும்பாலும் சட்டவிரோதமான நடைமுறையாகும். தரவுகளின் படி, இது ஃபுலானி இனக்குழுவின் ஒரு பிரிவினரான வோடாபே மக்களின் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரப் பாரம்பரியமாகும். அவர்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள் மற்றும் இந்த பாரம்பரியத்திற்குப் பின்னால் உள்ள சுவாரஸ்ய உண்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

எந்த நாட்டில் ஆண்கள் பிற ஆண்களின் மனைவிகளைத் திருடிக்கொள்கிறார்கள்?

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரைச் சேர்ந்த ஃபுலானி இனக்குழுவின் ஒரு பிரிவினரான வோடாபே மக்கள் மத்தியில், ஆண்கள் திருமண விவகாரத்தில் ஒரு தனித்துவமான வழக்கத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் ஏற்கனவே திருமணமாகிவிட்ட பெண்களை அவர்களின் கணவரிடமிருந்து கவர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது உண்மைதான்.

கெரேவோல் திருவிழா என்றால் என்ன?

இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் 'கெரேவோல்' (Gerewol) திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இது ஆண்களும் திருமணமான ஆண்களும் பெண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போட்டியிடும் ஒரு அழகிப் போட்டி போன்ற நிகழ்வாகும். இந்த போட்டியில் ஆண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, தங்களை அழகாக அலங்கரித்துக் கொள்கிறார்கள்.

Advertisement

இந்த திருவிழா எப்படி கொண்டாடப்படுகிறது?

இந்த திருவிழாவில் ஆண்கள் ஒப்பனை செய்துகொண்டு, திருமணமான ஒரு பெண்ணுக்காகப் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வோடாபே இன ஆண்கள் தங்களை உலகின் மிகவும் அழகானவர்கள் என்று நம்புகிறார்கள். திருவிழாவின் போது, ​​அவர்கள் ஒப்பனை பூசி தங்கள் முகத்தோற்றத்தை மெருகேற்றுவற்கு பல மணிநேரம் செலவிடுகிறார்கள். இதில் வெண்மையான கண்கள், வெண்மையான பற்கள் மற்றும் நேரான மூக்கு ஆகியவை அடங்கும். ஒரு பெண் எந்தவொரு ஆணையும் கவர்ச்சிகரமானவராகக் கண்டால், கெரெவோல் திருவிழாவின் போது அவர் மீது தனக்கு ஆர்வம் இருப்பதை வெளிப்படுத்துவார்.

Advertisement

இந்த பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?

இப்பண்பாட்டின் மிகவும் வியக்கத்தக்க அம்சம் என்னவென்றால், ஒரு ஆண் அப்பெண்ணை யாருடைய கண்ணிலும் படாமலோ அல்லது பிடிபடாமலோ ரகசியமாகச் சந்தித்து, அவருடன் ஒரு இரவைக் கழித்து விட்டால், அப்பெண்ணின் முந்தைய திருமணம் தானாகவே முறிந்துவிடுகிறது; அவர் அந்த ஆணின் புதிய மனைவியாகிறார். எந்த செலவும் இல்லாமல் மிகவும் சுவாரஸ்யமான முறையில் இவர்கள் விவகாரத்தை செய்கிறார்கள்.