Just In
- 38 min ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 1 hr ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 2 hrs ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
Don't Miss
- News லோக்சபா தேர்தல்: ஓபிஎஸ், தமிழிசை, கனிமொழி, சவுமியா, திருமா..தமிழகத்தின் 11 நட்சத்திர தொகுதிகள்!
- Movies SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க இல்லறத்தில் இன்பம் பொங்க செய்ய வேண்டுமா? இந்த 3 விஷயத்தை முயற்சி பண்ணுங்க!
இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்க, தம்பதிகள் பின்பற்ற வேண்டிய மூன்று விழிகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இனிக்கும் உறவுகள், போக, போக கசப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரம், ஆடம்பரம், குணாதிசயங்கள், தாம்பத்தியம், குழந்தை வளர்ப்பு, அழகு என பல்வேறு காரணங்களால் தம்பதிகளுக்குள் இல்லற வாழ்வில் பிரச்சனைகள் எழ வாய்ப்புகள் உண்டு.
எப்படி பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு இஞ்சி, பூண்டு, தேன் என்ற மூன்று நல்ல தீர்வளிக்க வல்லதோ. அதே போல தான் இல்லறத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மூன்று வழிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கு காணலாம்...
செ(சொ)ல்வாக்கு!
உங்கள் துணைக்கு உங்கள் மீதான ஒரு செல்வாக்கும், சொல்வாக்கும் இருக்க வேண்டும். நீ சொல்வதை என்ன நான் கேட்பது, நீ என்ன பெரிய அறிவாளியா என்பது போல நடந்துக் கொள்ள கூடாது. இதை சரியாக பின்பற்றினாலே வீண் சண்டைகள், உறவில் விரிசல் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கேட்டால் என்ன தப்பு!
உங்கள் துணை உங்கள் சுதந்திரத்தை பறித்தால் தான் தவறு. உங்களுக்கு பாதுகாப்பாகவும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி கூறும் அறிவுரைகளை ஏற்பதில் எந்த தவறும் இல்லை. எனவே, உங்கள் மீது உங்கள் துணை அக்கறை எடுத்துக் கொள்ள தடை விதிப்பது தவறு. அக்கறை என்பது கொஞ்சுவது பாராட்டுவது மட்டுமல்ல, திட்டுவதும் கூட ஒரு வகையான அக்கறை தான்.
பாசம்!
கோபம் இருக்கும் இடத்தில் தான் பாசம் இருக்கும் என்பார்கள். அதற்கென கோபத்தை மட்டுமே காண்பித்து ஒ=கண்டிருக்க கூடாது. ரோட்டில் இருக்கும் குப்பையை வீட்டில் கொட்டுவோமா? இல்லை தானே. பிறகு ஏன் வெளியில் இருக்கும் கோபத்தை மட்டும் துணை மீது காண்பிக்க வேண்டும்.
பாராட்டு!
எல்லா உறவிலும் ஒரு பற்றை, அரவணைப்பை உண்டாக்குவது இந்த பாராட்டு தான். சில சமயங்களில் போலியான பாராட்டுகள் கூட நல்ல பலனை அளிக்கும்.
கேள்விகளும் வேண்டும்!
நம்மிடம் ஒரு பொருள் இருக்கும் வரை அதன் மதிப்பு தெரியாது. அதை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டோம். அதே அதை பிரிந்தால் மிகவும் வருத்தப்பாடுவோம். உடன் இருப்பவர் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். பேச்சுக்காகவாவது எப்படி இருக்க, இன்னிக்கு எப்படி போச்சு நாள், என்ன பண்ண இன்னிக்கி.. என சில கேள்விகள் கேட்டு பேச வேண்டும்.
அதற்கென நாளைக்கு என்ன சமையல், சட்டை இஸ்திரி பண்ணிட்டியா என வேலை ஆள் இடம் நடந்து கொள்வது போல கேள்வி கேட்க கூடாது.
இணைப்பு!
நெட்வர்க் இணைப்பு இருந்தால் தான் கால் செய்ய முடியும், இன்டர்நெட் இணைப்பு இருந்தால் தான் ஃபேஸ்புக், வாட்சைப் பயன்படுத்த முடியும். அதே போல கணவன், மனைவிக்குள் ஒரு நல்ல இணைப்பு இருந்தால் தான் குடும்பத்தை சரியாக வழிநடுத்த முடியும். இதை நீங்கள் செம்மையாக செய்து வந்தாலே, இல்லறம் எந்நாளும் நல்லறமாய் சிறக்கும்.