Just In
- 1 hr ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 2 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 2 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 4 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
Don't Miss
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மூக்கும், முழியும் இல்லை தான், ஆனால் காதல் இதயம் முழுக்க இருக்கு... - நான் கடந்து வந்த பாதை #5
இங்கு அழகை மட்டுமின்றி, காதலையும் சேர்த்து வென்ற ஒரு அற்புத காதலர்களை பற்றி கூறப்பட்டுள்ளது.
காதலுக்கு கண்ணில்லை என்பார்களே, அது உண்மை தான். உண்மையான காதல் அழகையோ, உடல் உருவத்தையோ வைத்து வருவதில்லை. காதல் இரு மனதின் புரிதல், இணைதலின் பிள்ளையாய் பிறக்கும் ஜீவநதி. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கின்றனர் இந்த அற்புத தம்பதியினர்.
திருமணம் பார்க்க ஆரம்பித்தாலே பெண் மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், க்சூவுக்கு (29 வயது பெண்) அது இரண்டுமே குறையாகிப்போனது. ஆனால், இவருக்கான துணை உலகிற்கு ஒரு உதாரணமாக திகழ்வார் என இப்பெண் அந்நாளில் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே...
எதிர்பாராத விபத்து!
க்சூ பிறந்து ஒரு மாதம் தான் இருக்கும். இவரது தாய் இவரை ஒரு கூடையில் பத்திரமாக படுக்க வைத்து வேலைக்கு சென்றுவிட்டார். க்சூவின் அக்கா சிறிது நேரத்திலேயே தாயை காண ஓடோடி சென்றார். அதற்கான காரணம் ஒரு எலி க்சூவின் மூக்கை கடித்து விட்டது.
கேலி, கிண்டல்!
மிகவும் கோரமான விபத்தால் ஒரு மாத குழந்தையாக இருக்கும் போதே முக அழகை இழந்தார் க்சூ. ஆனால், இந்த சமூகம் இவருக்கு இதை விட கொடுமையான வலியை கேலி, கிண்டல்கள் மூலமாக கொடுத்தது.
மிகந்த ஏளன செயல்களால் ஆறாம் வகுப்போடு பள்ளியை விட்டு வெளியேறினார் க்சூ. தனது 17 வயதில் முதல் வேலையில் சேர்ந்தார். அங்கும் இதே கேலி, கிண்டல் தொடர்ந்தது.
திருமணம்!
18 வயதில் க்சூவுக்கு திருமணம் நடந்தது. இவரை விட எட்டு வயது மூத்த நபரை திருமணம் செய்துக் கொண்டார் க்சூ. ஆனால், இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை.
இரண்டே வருடத்தில் விவாகரத்தானது. கணவர் வீட்டார் க்சூவின் முக தோற்றத்தை வைத்து திட்டிக் கொண்டே இருந்தது தான் பிரிவின் காரணமாக அமைந்தது.
தடைகளை தகர்த்து வளர்ந்தார்!
அனைவராலும் நிராகரிக்கப்பட்டு வந்த க்சூ மனமுடைந்து போனார். வெளியிலகுடன் தொடர்புக் கொள்ள க்சூவுக்கு இருந்த ஒரே வழி இனையதளம் தான்.
லின்!
சமூக ஊடகத்தின் வழியாக தான் தன்னுடைய துணையான லினை கண்டார் க்சூ. முதலில் தனது முகத்தை லினுக்கு காட்ட விரும்பவில்லை க்சூ. பிறகு வெளிப்படையாக இதை கூற வேண்டும், மறைக்க கூடாது என்பதால், தனக்கு மூக்கு இல்லை என கூறினார். ஏற்கனவே, க்சூவின் நம்பிக்கை, நல்ல குணம் போன்றவற்றால் ஈர்ப்புக் கொண்ட லின் க்சூவை முழுமனதுடன் ஏற்றுகக் கொண்டார்.
காதல் மலர்ந்தது!
முதல் முறையாக தனது உருவத்தை ஏற்று உண்மையான அன்பை வெளிக்காட்டும் நபராக கண்முன் திகழ்ந்தார் லின். முதல் முறை நேரில் பார்த்துக் கொண்ட ஒரே மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டனர் க்சூவும். லினும்.
கடுமை!
லின் தனது குடும்பத்தாரை ஒத்துக்கொள்ள வைக்க சற்றே கடுமையாக போராடினார். அனைத்தையும் கடந்து முழு மனதுடன், இதயம் முழுக்க காதல் நிறைத்து இருவரும் இல்லற உறவில் இணைந்தனர்!