Just In
- 1 hr ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எல்லா வயதிலும் செக்ஸ் முக்கியம் - நடிகரின் மனைவி பரபர பேச்சு!
அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா எல்லா வயதிலும் செக்ஸ் முக்கியம் என இந்தியா டுடே பெண்கள் மாநாட்டில் கூறியுள்ளார்.
இந்தியா டுடே பெண்கள் உச்சி மாநாடு 2017-ல் பல துறையை சேர்ந்த பெண்கள், சாதனையாளர்கள், தடைகளை தகர்த்து எதிர்த்து முன் வந்தவர்கள் பேசினார்கள். இதில் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னாவும் ஒருவர்.
பெண்ணியவாதியாக, நகைச்சுவை உணர்வு உள்ளவராக, விழிப்புணர்வு கொண்டவராக, மனைவியாக, தாயாக, எழுத்தாளராக என ஒரு பெண்ணாக தனது பரிமாணங்களை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் ட்விங்கிள் கன்னா.
பெண்ணியம்!
நீங்கள் யாரை வேண்டுமானாலும் வெறுக்கலாம். பூனை, ஆண்கள், உறவினர் என யாரை வேண்டுமானாலும். எப்போது வரை நீங்கள் அனைவரையும் சமம் என கருதுகிறேர்களோ அப்போது வரை நீங்கள் பெண்ணியவாதி தான்.
நாப்கின் விழிப்புணர்வு!
பத்மன் எனும் படத்தை நாங்கள் எடுப்பதற்கான தேவை இருந்தது. அருணாச்சலம் முருகானந்தம் நாப்கின் குறைந்த விலையில் கொண்டுவந்தது, அதற்கான அவரது முயற்சி பாராட்டதக்கது. இன்றுவரை நாப்கின் ஏதோ தகாத பொருளாக தான் பார்க்கப்படுகிறது.
அதை மறைத்து பேப்பரில் சுற்றி தான், யாருக்கும் தெரியாமல் தான் வீசுகிறோம். நாப்கின் பற்றி, மாதவிடாய் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
நகைச்சுவை!
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் நகைச்சுவை ரசனை அதிகமாக இருந்த குடும்பத்தில் தான. நாங்கள் எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்வோம், சீரியஸாக எதையும் பார்க்கவில்லை. அது அரசியலில் இருந்து, வீடு வரை அனைத்திலும் தொடர்ந்தது.
ஜோக்ஸ்!
கட்டுபாடுகள் அனைத்தையும் தளர்த்திக் கொண்டால் அனைத்தும் மகிழ்ச்சியாக, நகைச்சுவையாக மாறிவிடும். உண்மையின் வேர்களில் நகைச்சுவை இருக்கிறது.
ஒருவரை நீங்கள் மகிழ்விக்க முடியும் என்றால், நீங்கள் அவரது பார்வையை மாற்ற முடியும். சிரிப்பு என்பது தும்மல், உச்ச உணர்ச்சி போல வெளிப்பட வேண்டியது தான். அதை தடுக்க கூடாது.
திருமணம்!
இல்லறத்தை பொறுத்த வரை நாங்கள் ஒரு சிறந்த அணி. நாங்கள் ஒன்றாக டேபிள் டென்னிஸ் விளையாடுவோம். அதே போல, செக்ஸ் என்பது திருமணத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.
எல்லா கட்டத்திலும் செக்ஸ் இல்லற வாழ்வில் அவசியம் தான். ஆனால், இது மட்டும் அல்ல. நீங்கள் எவ்வளவு வலுவாக இருக்கிறீர்கள் என்பது தான் அவசியம்.
கணவன் அழகானவர்கள், கைப்பையும் கூட, இவை இரண்டும் இல்லாமல் வாழ முடியும். ஆனால், இவை இரண்டும் உங்கள் வாழ்க்கையை சௌகரியமாக உணர வைக்கும்.
தாய்மை!
தாய்மை என்பது பெண்களை பொறுத்தவரை வாழ்க்கையை மாற்றக் கூடிய அனுபவம் தரக்கூடியது. தாய்மை ஒரு சிறந்த ஒன்று. பெண்கள் வலிமையாக இருக்க வேண்டிய பகுதி தாய்மை.
எழுத்து!
எனது நடுவயதில் நல்ல துணையாக இருப்பது எழுத்து. முகத்தில் இருக்கும் வரிகளை விட, நான் எழுதும், எழுத போகும் வரிகள் பற்றி தான் அதிகம் சிந்திக்கிறேன்.