Just In
- 1 hr ago நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- 2 hrs ago சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- 2 hrs ago அனுமன் ஜெயந்தியன்று உருவாகும் அரிய யோகங்கள்: இன்று இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..
- 3 hrs ago சித்ரா பெளர்ணமியில் கண்டிப்பாக இதை செய்யுங்கள்... செல்வம் சேரும்..!
Don't Miss
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எத்தனை பேரிடம் இந்த நல்லுள்ளம் இருக்கும்? இப்படி திருமணம் செய்தால் உலகே வாழ்த்துமே!
சமுதாயத்தில் பின்தங்கிய 500 குழந்தைகளை விருந்தினராய் அழைத்து திருமணம் செய்துக் கொண்ட அற்புதமான தம்பதியர்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கியமான தருணம். ஒரு கூட்டில் இருந்து புதிய கூட்டுக்குள் பிள்ளைகள் காலடி எடுத்து வைப்பது போன்றது.
அது ஒரு தனி உலகம். அதை நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம், எப்படி துவங்குகிறோம் என்பதில் தான், அது சொர்கமா, நரகமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
பெரும்பாலும் திருமணங்கள் பெரியவர்களின் விருப்பப்படி தான் நடக்கும். ஒருசிலர் மட்டும் சட்டதிட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்களை உடைத்து தங்களுக்கு பிடித்தபடி திருமணம் செய்துக் கொள்வார்கள்.
அப்படி ஒரு திருமணம் தான் இது...ஒரு அற்புத திருமணம்...
பெங்களூர் தம்பதி!
பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணத்தில் உணவிலும், ஆடம்பரத்திலும் செலவு செய்வதை விட, ஏழை குழந்தைகளை மகிழ்விக்க அந்த பணத்தை செலவு செய்யலாம் என தீர்மானம் செய்தனர்.
Image Source
அக்டோபர் 23, 2016!
திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, சுரபி ஃபேஸ்புக் லைவ்-ல் தோன்றி, தனது திருமணத்தை பற்றியும், புதிய முயற்சியை பற்றியும் அறிவித்தார். மேலும், இந்த முயற்சிக்கு உதவவும், தன்னார்வம் உள்ளவர்களையும் தங்களுடன் இனைந்து பணிபுரிய கேட்டுக் கொண்டார். இதற்கான படிவத்தை கூகுல் ஃபாரம்-ல் உருவாக்கினார்.
Image Source
சேகரிப்பு!
உதவியற்ற ஏழை குழந்தைகளுக்கு நன்கொடையாக, பரிசுகளாக, புத்தகங்கள், உடைகள், இனிப்புகள் என பல வகைகளில் பொருட்கள் வந்து சேர்ந்தன. இவர்களுடன் சமர்த்தனம் என்ற அறக்கட்டளையும் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
Image Source
500 குழந்தைகள்!
திட்டமிட்டப்படி சுரபியின் திருமணத்தின் போது விருந்தினர்களாக 500 குழந்தைகள் வந்தனர். அவர்களுக்கு திருமண நாளான் நவம்பர் 6, 2016 அன்று விளையாட்டு போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்சிகள், என பல கேளிக்கை போட்டிகள் நடத்தப்பட்டன. அது அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
மகிழ்ந்த தம்பதி!
கேளிக்கை என்று மட்டுமின்றி, வந்த குழந்தைகளுக்கு மனதார உணவும் இட்டு மகிழ்ந்தனர் இந்த அற்புத தம்பதியினர். திருமணத்திற்கு பிறகு இது குறித்து சுரபி முகநூல் பதிவும் செய்திருந்தார். அதில் தனது கனவு நினைவானதற்கு மகிழ்ந்ததாக கூறியிருந்தார்.
பலரும் இவர்களை மனமார வாழ்த்தி கருத்து கூறியிருந்தனர்.