For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனிலவுக்கு கணவனை விட்டுவிட்டு தனியாக சென்று எஞ்சாய் செய்த மனைவி!

|

ஹூமா மொபின் மற்றும் அர்சலான் பட் இருவரும் நிஜமாகவே ஒருவருக்கு ஒருவர் என சரியாக நிச்சயிக்கப்பட்ட ஜோடி. இவர்கள் இருவருமே பயணம் செய்ய மிகவும் விரும்பும் தம்பதிகள். புதிய இடங்கள், புதிய நபர்கள் காண இவர்களுக்கு மிகுதியான ஆர்வம் உண்டு.

இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். துபாய்க்கு தேனிலவு கொண்டாட சென்று வந்தனர். பயணம் செய்வதில் பேரார்வம் கொண்ட இந்த தம்பதிகள் கிரீஸ் நாட்டிற்கு மீண்டும் தங்களது தேனிலவை கொண்டாட் திட்டமிட்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக இவர்கள் திட்டமிட்டு வைத்திருந்த அந்த பயணத்தின் போது அர்சலானின் விசா மறுக்கப்பட்டது. இதனால், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்த அந்த பயணத்திற்கு இருவரும் சேர்ந்து செல்லும் வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

ஆனால், பயணத்தின் மீது கொண்ட ஈர்ப்பில், அர்சலான் தன் மனைவியை சென்று வர கூறினார். இதனால், தனது காதல் கணவனை விட்டு, தனியாக முழு சுற்றுலாவையும் கொண்டாடி திரும்பினார் ஹுமா.

இதில், சிறப்பு என்னவெனில், தான் தனது கணவனை மிஸ் செய்வதை உணர்த்தும் வகையில், தான் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களிலும் கணவன் தோள் மீது கைப்போட்டபடி புகைப்படம் எடுத்து சமூக தளங்களில் பகிர்ந்திருந்தார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Goes On Honeymoon Without Her Husband

Woman Goes On Honeymoon Without Her Husband, take a look on here.
Desktop Bottom Promotion