Just In
- 4 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 5 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 6 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 6 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருமணமான பிறகு பெண்களிடம் திடீரென கவர்ச்சி அதிகரிப்பதற்கான காரணங்கள்!
கவர்ச்சி என்பது வெறும் உடல் வடிவம் அல்லது நிறத்தை வைத்து வருவது அல்ல. ஒருவரின் பாவனை, பண்பு, குணாதிசயங்கள் மூலம் வெளிப்பட்டு மன ரீதியாக உண்டாகும் ஈர்ப்பும் கவர்ச்சி தான். திருமணத்திற்கு பிறகு இவ்வகையான கவர்ச்சி பெண்கள் மத்தியில் திடீரென அதிகரிக்கின்றன.
உங்கள் உறவினர் அல்லது தோழிகள் மத்தியில் இதை நீங்கள் கவனித்து இருக்கலாம். திடீரென பொலிவுடனும், கவர்ச்சியுடனும் இருப்பார்கள். இதற்கு திடீர் கவர்ச்சிக்கு புதிய வாழ்க்கை, சூழல், உறவு, புரிதல், உணர்தல் போன்றவை தான் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன...
தைரியம்
திருமணமான பெண்களிடம் தைரியம் அதிகமாக இருக்கும். தனியாக இருப்பதை விட, தனக்கான ஒருவன் மற்றும் அவனது அரவணைப்பு என இருப்பது அவர்களது தைரியத்தை அதிகரிக்கிறது. இது அவர்களிடம் மேலும் ஈர்ப்பு அதிகரிக்க வைக்கிறது.
சௌகரியம்
திருமணமான பிறகு தான் பெண்கள் தங்கள் வாழ்க்கையை சௌகரியமாக வாழ்கின்றனர். திருமணத்திற்கு பிறகு யாரும் அந்த பெண்ணை சீண்டிவிட முடியாது, ஒரு கேள்வி கூட கேட்க முடியாது. கணவன் என்ற பாதுகாவலனை தாண்டி தான் அவளை நெருங்க வேண்டும். இந்த சௌகரியம் மற்றும் பாதுகாப்பு பெண்களின் ஈர்ப்பை, கவர்ச்சியை அதிகரிக்கிறது.
நிரந்தர காதல்
ஓர் பெண் கவர்ச்சியாக, மிகவும் ஈர்ப்பாக தெரிய வேண்டும் எனில், அவளுக்கு தேவையான முதல் விஷயம் நிரந்தர காதல். எந்த பெண்ணுக்கு உண்மையான் காதல் நிறைய கிடைக்கிறதோ, அவர் எப்போதுமே ஈர்ப்பாக, கவர்ச்சியாக தான் தெரிவார்.
புதிய முதிர்ச்சி
குடும்ப பொறுப்பு, அக்கறை, கவனிப்பு, என திருமணமானவுடன் பெண்கள் மத்தியில் புதிய முதிர்ச்சி எட்டிப் பார்க்கும். முன்பு சிறு புன்னைகையுடன் கடந்து சென்றவர்கள், பிறகு உங்களை பார்த்து கைக்காட்டி, நலம் விசாரித்துவிட்டு தான் போவார்கள். இந்த முதிர்ச்சியும் கூட பெண்கள் மத்தியில் திடீர் ஈர்ப்பு மற்றும் கவர்ச்சியை அதிகரிக்கிறது.
பெண்மை
தாய்மை தான் ஓர் பெண்ணை முழு பெண்மையை அடைய வைக்கிறது, உணர வைக்கிறது. இதுவும் கூட ஓர் முக்கிய காரணம் என கூறலாம்.
கடமை
குடும்ப தலைவி, இல்லறம், கணவனின் வேலையில் பங்கெடுத்தல், குடும்ப வளர்ச்சியில் உறுதுணையாக இருத்தல் போன்ற கடமைகள் பெண்களின் மீதான ஈர்ப்பையும், கவர்ச்சியையும் அதிகரிக்க செய்கின்றன.