Just In
- just now கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- 1 hr ago கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- 2 hrs ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 3 hrs ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
Don't Miss
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
30-களுக்கு பிறகு உங்கள் மனைவியிடம் அதிகம் எதிர்பார்க்க கூடாது 7 விஷயங்கள்!
சுய வாழ்க்கை மட்டுமின்றி, இல்லற வாழ்க்கையிலும் அடுத்தடுத்த கட்டங்களை கடக்கும் போது சிலவற்றை இழக்க நேரிடம். அந்த தருணத்தில் மனைவியிடம் நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டிய எதிர்பார்ப்புகள்.
ஆண்களின் மனதும் ஒரு வயதுக்கு மேல் மீண்டும் குழந்தையாக மாற துவங்கும் என்பார்கள். அதனால், வயதாவதை மறந்து மீண்டும் இல்லறத்தில் சில விஷயத்திற்காக மனைவியிடம் அடம் பிடிப்பார்கள். இது 50, 60 வயதை தாண்டிய பிறகு ஏற்படும் மாற்றம்.
ஆனால், 30களில் இருந்து 40-ல் நடைப்போட்டு கொண்டிருக்கும் போது தான் நீங்கள் வாழ்க்கையை கவனமாக கையாள வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தவறு செய்தால் அதிலிருந்து வெளிவருவதம், திருத்திக் கொள்வதும் மிகவும் கடினம்.
முக்கியமாக மனைவியிடம் சில விஷயங்களை அதிகம் எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும்...
எதிர்பார்ப்பு #1
மன்னிப்பு - ஆண்கள் தவறு செய்வதில் வல்லவர்கள். ஆனால், அதை மன்னிக்கும் குணம் பெண்களிடம் எல்லா கட்டத்திலும் இருக்காது. ஒரு வயதுக்கு மேல், தப்பு செய்வதை திருத்திக்கொள்ள தான் வேண்டும். மீண்டும், மீண்டும் தெரிந்தே தப்பு செய்துவிட்டு மனைவி மன்னித்து விடுவாள் என எதிர்பார்க்க கூடாது.
எதிர்பார்ப்பு #2
சேமிப்பு - சேமிப்பு காதலுக்கு வேண்டுமானலும் வேண்டாமல் இருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு, திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் சேமிப்பு தேவை. குழந்தை, குழந்தையின் படிப்பு, மருத்துவ செலவுகள் என சேமிப்பதை விட, சேமிப்பை அக்ரைக்கும் விஷயங்கள் தான் அதிகம்.
எதிர்பார்ப்பு #3
வளர்ப்பு - ஒரு தாயின் கடமை தன் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பது, ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது எனில், ஒரு தந்தையின் கடமை தன் மகனை ஆரோக்கியமாக வளர்ப்பது. இதில், தன் பங்கை குறைத்துக் கொள்வது அல்லது அலட்டல் இல்லாமல் இருந்துவிட்டு, அதை மனைவியிடம் சரிக்கட்ட கூறுவது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கவே கூடாது.
எதிர்பார்ப்பு #4
திட்டமிடுதல் - திட்டமிடுதல் இல்லாத எந்த விஷயமும் வெற்றிப் பெறாது. இது வாழ்விற்கும், இல்லறத்துக்கும் கட்சிதமாக பொருந்தும். ஒரு விஷயத்தை சரியாக திட்டமிடாமல் கோட்டைவிட்ட பிறகு, தன் தோல்வியை மனைவி ஏற்றுக் கொள்வாள் என எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து செய்யும் தவறுகளை ஒருபோதும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எதிர்பார்ப்பு #5
கடன் - கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். இது நூறு சதவீதம் உண்மை. அண்ணன் - தம்பி உறவில் கூட கடன் பகையை வளர்க்கும். எனவே, கடனை அதிகரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் எதிர்பார்ப்பு ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்பு #6
தாம்பத்தியம் - தாம்பத்தியம் என்பது தானாக ஏற்பட வேண்டும். வேண்டும், வேண்டும் என ஒருவரை வற்புறுத்தி ஈடுபடக் கூடாது, முக்கியமாக வயதாக, வயதாக தாம்பத்தியத்தின் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது தான் அழகு. தேவை தான், ஆனால் வயதை கருதி அதன் மீதான அளவை குறைத்துக் கொள்வது நல்லது.
எதிர்பார்ப்பு #7
பொறுப்பு - ஆண்களின் அழகே பொறுப்பு தான். ஒரு ஆண் தான் குடும்பத்தை பொறுப்புடன் நடத்த வேண்டும். உறவு, உணர்வுகள், பணம், வளர்ப்பு என அனைத்திலும் பொறுப்புடன் இருக்க வேண்டும். 30 களுக்கு மேலும் பொறுப்பில்லாமல் இருந்துவிட்டு அதை ஒரு மனைவி சகித்திக் கொள்வாள் என எதிர்பார்க்கவே கூடாது.