Just In
- 51 min ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 2 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 6 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 11 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Don't Miss
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சின்ன, சின்ன சண்டையும், கொக்கரிக்கும் கோழியும் - சின்ன பாப்பா, பெரிய பாப்பா!
மாமியார், மருமகள் என்றாலே இந்தியா - பாகிஸ்தான் என்பது போல தான் 99.99% சீரியல் மற்றும் திரைப்படங்களில் காண்பிக்கப்படும். ஆனால், உண்மையில் எல்லா உறவுகளை போல மாமியார், மருமகள் உறவும் அற்புதமானது தான்.
மகள் இல்லாத மாமியாருக்கும், அம்மா இல்லாத மருமகளுக்கும் தான் தெரியும் இந்த உறவின் ஆழம் எவ்வளவு உன்னதமானது என்று. ஓர் பாசத்திற்குள்ளான பனிப்போர் தான் இது.
தன் கணவனை அக்கறையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மனைவியும். இத்தனை ஆண்டுகள் தன் மகன் மீது செலுத்தி வந்த அன்பை இனி முழுமையாக காண்பிக்க முடியுமா, முடியாத என்ற நிலையில் அம்மாக்களும் தடுமாறும் போது தான் சண்டைகள் உருவாகின்றன.
இதையும் படிங்க: ஆண்களை குஷிப்படுத்தும் "இல்லற" விஷயங்கள்!!
சிற்சில குழப்பங்கள், பதட்டம் தான் மாமியார், மருமகள் எனும் உறவினை சற்று தருமாற வைக்கும். முழுமையாக புரிந்துக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் மற்றுமொரு அம்மா, மகளாக தான் வாழ்கிறார்கள்....
கவனம்!
எதை பேச ஆரம்பித்தாலும் இயல்பாக, சுதந்திரமாக கருத்தை கூற முடியாமல். ஏதாவது கூறினால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற ஓர் அச்சம் இருக்கும். இதனால், பார்த்து, பார்த்து பேசும் ஓர் சுபாவம் நிலவும்.
அக்கறை!
மருமகள் மீது மாமியாருக்கும், மாமியார் மீது மருமகளுக்கும் இவர் தனது அம்மா/ மகள் மாதிரி அக்கறையாக இருப்பரா? உடல்நலம் சரி இல்லை என்றால் நன்றாக பார்த்துக் கொள்வாரா என்ற எண்ணம் இருக்கும்.
உடை நாகரீகம்!
ஆரம்பக் காலக்கட்டத்தில் மாமியார், மருமகள் இருவருமே தாங்கள் உடுத்தும் உடை மீது அக்கறை எடுத்துக் கொள்வார்கள். முக்கியமாக புகுந்தவீடு சென்ற மருமகள். இதனாலேயே திருமணமான முதல் பத்து நாட்களுக்கு சுடிதாரும், புடவையுமாக சுற்றுவார்கள்.
உர்ர்ர் முகம்!
முகத்தை உர்ர்ர் என்று வைத்திருந்தால் கொடுமை செய்வாரோ, சொல்வதெல்லாம் கேட்க வேண்டுமோ..? என்ற ஒரு அச்சம் உண்டாகும். எனவே, அவரை எப்படியாவது ஐஸ் வைத்து கூல் ஆக்க வேண்டும் என துடிப்பார்கள்.
குழப்பம்!
நாம் இதை செய்தால், இப்படி செய்தால் அவருக்கு பிடிக்குமா? நமது இயல்பு, குணாதிசயங்களை இவர் எப்படி எடுத்துக் கொள்வார், அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒரு பதட்டமான நிலையை உண்டாக்கும்.
தனிக்குடித்தனம்!
திருமணத்திற்கு பிறகு எல்லா மாமியார்களுக்கும் இருக்கும் ஓர் எண்ணம் இந்த தனிக்குடித்தனம். பையனை பிரித்து கூட்டி சென்றுவிடுவாளோ என்ற அச்சம் பெரும்பாலான ஆண்களை பெற்ற அம்மக்களுக்குள் இருக்கிறது.
இதில் விசித்திரம் என்னவெனில், தன் மகள் இதை செய்தால் மார்தட்டிக் கொண்டாடுவதும் இவர்களே தான்.