For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் அமலா பாலை வீட்டு சிறைப்படுத்த துடிக்கிறார்கள் இவர்கள்?

இங்கு விவாகரத்துக்கு பிறகு பெண்ணான ஒருவள் என்னென்ன சங்கடங்களை, தடைகளை, சமூக வார்த்தைகளை தாண்டி / தாங்கி வாழ வேண்டியுள்ளது என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

|

விவாகரத்துக்கு பிறகு பெண் என்பவள் ஓர் அறைக்குள் அடங்கிவிட வேண்டும் என்பது தான் இந்த சமூகத்தின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. விவாகரத்துக்கு பிறகு ஒரு ஆண் அவனது வாழ்க்கையை சாதரணமாக எடுத்து செல்லலாம், எப்போதும் போல வாழலாம், நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கலாம். ஏன், விவாகரத்தான அந்த ஆண் அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர இந்த சமூகமே அவரை இந்த செயல்களில் ஈடுபட கூறி அறிவுறுத்தும்.

ஆனால், இதையே ஓர் பெண் செய்தால்? அவள் மறுநாள் மீண்டும் வேலைக்கு சென்றால்? சிரித்து நால்வருடன் பேசினால்? தோழிகளுடன் ஒரு பயணம் மேற்கொண்டால்? அவளுக்கு உணர்ச்சியே இல்லை, உடனே வேறு ஒருத்தனை தேட ஆரம்பித்துவிட்டால், அவளுக்கு முன்னேவே வேற ஒருத்தன் கூட தொடர்பு இருக்கும், அதான் இவன அத்துவிட்டு, சந்தோசமா இருக்கா... என பல வார்த்தை அம்புகள் அவளை நோக்கி பாய துவங்கும்.

விவாகரத்து என்பது பெரும்பாலும் நம் சமூகத்தில் பெண்களுக்கு மட்டுமே ஒரு பிரச்சனையாகவும், தடையாகவும், சாபக்கேடாகவும் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is divorce a sin only for girls?

Is divorce a sin only for girls?
Desktop Bottom Promotion