Just In
- 50 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Movies பீரியட்ஸ் நேரத்தில் அதை குடிக்க மாட்டேன்.. நான் ரொம்ப சுயநலக்காரி.. பிகில் நடிகை பகீர்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உங்க உறவுல இன்பம் ஏகபோகமா பெருக, தினமும் மறக்காம இந்த 5 விஷயத்த செய்யுங்க!
எல்லாருமே சண்டை சச்சரவுகள் இல்லாத இல்லறத்தை தான் விரும்புகின்றனர். ஆனால், அது அமைகிறதா என்பது அவரவர் நடத்தையில் தான் இருக்கிறது. அதற்கென சண்டை சச்சரவே இல்லாமல் இருந்தாலும் அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிடும்.
சண்டை, சச்சரவுகள் உப்பு போன்றது. குறைவாக இருந்தால் இல்வாழ்க்கை எனும் உணவு ருசிக்கும். அளவுக்கு மீறினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் உறவிலும் இன்பம் ஏகபோகமாக பெருக வேண்டும் என்றால் தினமும் இந்த 5 விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்...
ஒப்பிக்க தவற வேண்டாம்!
தினமும் உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் ஒன்று விடாமல் அனைத்தையும் உள்ளதை / நடந்ததை மறக்காமல் உங்கள் துணையிடம் கூறும் பழக்கத்தை பின்பற்றுங்கள். இவ்வாறு செய்யும் தம்பதிகளின் உறவு இன்பமையமாக அமைகிறதாம்.
நேரம் தவறாமை!
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் துணையுடன் நேரம் செலவழிக்க தவற வேண்டாம். வெளியூர்களில் இருந்தாலும் கூட, தொலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டு அவருடன் நேரம் செலவழிக்க வேண்டும்.
பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்!
சிலர் ஓரிரு நாள் தன் துணை வெளியூர் சென்றால் கூட ஏதோ உலகமே இருள் சூழ்ந்து போவது போல உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இயல்பாக நடந்துக் கொள்ளுங்கள். அவரவர் வழியில் செல்லும் போது அவர்களுக்கான பாதையிலும் செல்ல அனுமதியுங்கள்.
பணிவு!
அதீத அக்கறை என்ற பெயரில் பெண்களும், ஆண் என்ற அதிகாரம் கொண்டு ஆண்களும் துணையின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்க வேண்டாம். பணிவாக நடந்துக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் முதலில் மனிதராக மதித்து மரியாதை அளியுங்கள்.
பாராட்டு!
சின்ன, சின்ன விஷயங்களிலும் பாராட்ட மறக்க வேண்டாம். அலுவல் வேலையாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, ஏதேனும் ஒன்றை சிறப்பாக செய்தால் அதை பாராட்ட மறக்க வேண்டாம்.
இன்பம் பொங்கும் வெண்ணிலா....
இந்த ஐந்து விஷயங்களை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரே மாதிரி எந்த குளறுபடியும் நடக்காமல் ஒழுங்காக செய்து வந்தால் உங்கள் வாழ்க்கை முழுவதிலும் "இன்பம் பொங்கும் வெண்ணிலா..." என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்!