Just In
- 2 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 5 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 7 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
- 8 hrs ago இந்த ஆரோக்கியமான உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உங்கள் இரைப்பையை கடுமையாக பாதிக்கமாம்... ஜாக்கிரதை...!
Don't Miss
- News "சிங்கப்பூர், ஹாங்காங் எங்களுக்கு தடை விதிக்கவில்லை!" எவரெஸ்ட் பரபர விளக்கம்.. அப்போ என்ன பிரச்சினை?
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Movies Durai: தேசிய விருது இயக்குநர் துரை காலமானார்.. பசி படத்தால் கவனம் ஈர்த்தவர்!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாம்பத்தியம் இல்லாத இல்வாழ்க்கை? தம்பதிகள் கூறும் பதில்கள்!
தாம்பத்தியம் என்பது இல்லற வாழ்வில் ஓர் அங்கம். பொதுவாகவே ஆண்கள் மத்தியில் சராசரியாக 55 வயது வரையிலும். பெண்கள் மத்தியில் சராசரியாக 45 வயது வரையிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை இருக்கும் என ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. இது உலகளாவிய பொதுவான கருத்து.
கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியம்? தம்பதிகள் கூறும் பதில்கள்!
ஆனால், சில சமயங்களில் உடல்நலம், சூழ்நிலை, மன அழுத்தம், ஆன்மிகம் போன்ற ஏதேனும் காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவது அல்லது நாட்டமின்றி போவது ஏற்படலாம். தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு இது போன்ற எண்ணம் எழலாம். ஆனால், மற்றொருவரும் இதை ஏற்றுக் கொள்வாரா என்பது தான் கேள்வி.
பல ஆண்களாலும், சில பெண்களாலும் கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட தருணத்தில் தங்கள் உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என தம்பதிகள் கூறும் பதில்கள் குறித்து இனிக் காணலாம்...
பதில் #1
நானும் என் மனைவியும் கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை. அவள் மன அழுத்தம் கொண்டுள்ளதால், உறவில் ஈடுபட நாட்டம் இல்லை என்கிறார். தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பதாலேயே எனக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இது ஓர் தொடர் கதையாக நீண்டு செல்கிறது.
பதில் #2
நான் தாம்பத்தியம் அற்ற ஓர் திருமண வாழ்வில் வாழ்ந்து வருகிறேன். இதை நான் வெறுக்கிறேன் என என் கணவரும் அறிவார். ஆயினும் அவர் கண்டுக்கொள்வதில்லை.
பதில் #3
தாம்பத்தியம் அற்ற வாழ்க்கையை விட்டு நான் பிரிந்துவிடலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால், என் குழந்தைகள் மற்றும் அவர்களது வளர்ச்சி , எதிர்காலம் கருத்தில் கொண்டு பிரிந்து செல்லாமல் இருக்கிறேன்.
பதில் #4
தாம்பத்தியம் அற்ற வாழ்க்கை எனில் அதில் மகிழ்ச்சி இல்லை என்ற கருத்தில் நான் உடன்படுவதாக இல்லை. வெறும் உடலுறவிற்காக மட்டும் நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.
பதில் #5
என் கணவர் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட முனைவதில்லை. மேலும், தவிர்க்கிறார். இது என்னை வெறுப்படைய வைக்கிறது.
பதில் #6
என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. இதனால் நான் வருந்துவதாக அவள் முன் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், மனதுக்குள் கத்த வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி எழும்.
பதில் #7
என் கணவர் நான் விரும்பி அழைத்தும் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்பவில்லை எனும் போது, அது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
பதில் #8
என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பமில்லை. அதனால், நான் அதை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆயினும் இது கடினமான ஒன்று தான்.
பதில் #9
தாம்பத்தியம் அற்ற இந்த திருமண வாழ்க்கை எத்தனை தூரம் பயணிக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
பதில் #10
கால சூழ்நிலையால் நான் தாம்பத்தியம் அற்ற திருமண வாழ்வில் வாழ்ந்து வருகிறேன். என் மனைவியை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆயினும், உணர்சிகளை கட்டுப்படுத்துதல் சற்றே கடினமானது தான்.
பதில் #11
33 வயதிலேயே என் தாம்பத்திய வாழ்க்கை முற்று பெறும் என நான் நினைக்கவில்லை. என் கணவருக்கு இப்போதெல்லாம் இதில் நாட்டம் இல்லை. ஒருவகையில் இதுவும் ஓர் ஏமாற்றம் தான். தாம்பத்தியம் என்பது திருமண வாழ்வில் அனைவரும் வேண்டுவது தானே.