Just In
- 3 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 8 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 10 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Movies இதுதான் ரியல் 20 இயர்ஸ் சேலஞ்ச்.. விஜய்யுடன் தரணி.. வேறலெவல் கில்லி ரீ ரிலீஸ் கொண்டாட்டம்!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்கள் உறவுக்கு வேட்டு வைக்கிறதா தொழில்நுட்பம்? அதிர்ச்சியான தகவல்கள்!!!
வாட்ஸ்-அப், ஃபேஸ் புக், வீடியோ காலிங், டேட்டிங், சாட்டிங் என்று தொட்டதற்கு எல்லாம் செயலிலி (App) வாயுலாக ஊடுறவி உறவாடும் வகையாக கலாச்சாரம் மருவிவிட்டது. இதன் காரணமாக உறவுகள் சீக்கிரம் ஒட்டிக்கொள்வதை போல, வெகு விரைவாக பிரிந்தும் விடுகின்றன.
ஒரே இடத்துல புருஷனும், பொண்டாட்டியும் வேலை பண்ணா இவ்வளோ பிரச்சனை வருமா என்ன?!!
இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது நேரடி உணர்வின் பிரதிபலிப்பு இல்லாததுதான். சாட்டிங்கில் நீங்கள் அனுப்பும் செய்து எழுத்தாக தான் வெளிப்படுமே தவிர உணர்வாக வெளிப்படாது. நீங்கள் விளையாட்டாக அனுப்பும் செய்து வினையாக மாறும். சீரியசாக கூறும் செய்தி விளையாட்டாக எடுத்துக் கொள்ளப்படும்.
பிரிந்த காதல் துணையுடன் மீண்டும் சேர்வது சரியா, தவறா?
முகபுத்தகத்தில் பதிவேற்றம், வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் என அனைத்தும் உறவை இறுக்கவும், முறிக்கவும் காரணமாக திகழ்கிறது. பெரும்பாலும் முறித்து எறிந்துவிடுகிறது என்பது தான் உண்மை.
தவறான புரிதல்...
முன்பு கூறியவாறு, செய்திகள் அனுப்புவம் முறை தான் இந்த தவறான புரிதல்களை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் நாம் எந்த பாணியில், தொனியில் செய்தியினை அனுப்புகிறோம் என்பதை எதிர்முனையில் செய்தியை பெறுபவருக்கு தெரியாமல் இருப்பதே ஆகும்.
நேரமின்மை
போதிய நேரம், ஒருவரோடு ஒருவர் செலவழிப்பது இல்லை என்பது முக்கியமான காரணம் ஆகும். என்னதான், பல மணி நேரம் மொபைலில் பேசினாலும், செய்திகள் அனுப்பினாலும் நேருக்கு நேர் முகம் பார்த்து பேசுவதை போல இருப்பதில்லை.
அந்நியன் போன்ற வாழ்க்கை
பல சமயங்களில் ஒன்றாக இருப்பினும் கூட, ஒருவரை ஒருவர் முக பார்த்து பேசாது, சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பது உறவினை பெருமளவு பாதிக்கிறது. ஒரே வீட்டில், ஒரே அறையில், அருகருகே இருந்தும் கூட சிலர் ஃபேஸ் புக் மோகத்தில் சரியாக முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, உறவினுள் விரிசல் ஏற்பட காரணமாக இருக்கின்றனது என்பது தான் அதிர்ச்சியான தகவல்.
சண்டைகள்...
முகப்புத்தகத்தில் போடும் பதிவுகளில் இருந்து, கருத்து, விருப்பம் என பல விஷயங்களினால் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. உதாரணமாக, வேறொரு பெண்ணின் புகைப்படத்திற்கோ, பதிவேற்றதிற்கோ கருத்துகள் தெரிவிப்பது, பகிர்வது போன்றவை கூட உறவில் விரிசல் ஏற்பட, சின்ன சின்ன சண்டைகளை பெரிதாக்க காரணமாக இருக்கின்றது.
உணர்வுகள் வலுவிழப்பு
இதன் காரணங்களால் உணர்வுகள் குறைந்துக் போய்விடுகிறது. உறவுகள் பிரிய பெரும் காரணமாகிவிடுகிறது. புன்னகை, அழுகை, ஆச்சரியம், பூரிப்பு என எந்த ஒரு உணர்வும் முழுமையாக உறவுகளுக்கும் எழுவதை தடுக்கும் தடையாகிவிட்டது தொழிநுட்பம்.
தூரம் அதிகரிக்கிறது
நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ச்சியடைவதன் அதே அளவு உறவுகளுக்குள்ளான இடைவேளை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. காதலன், காதலி மட்டுமல்லாமல், தாய், தந்தை, அண்ணன், தங்கை போன்ற உறவுகளையும் கூடப் பாதிக்கப்படுகிறது.