Just In
- 20 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 55 min ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 3 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Movies ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க காதலன் உங்களை கண்டுக்காம இருக்காங்களா? கவலைப்படாதீங்க...
பொதுவாக காதலிக்கும் ஆரம்ப காலத்தில் விழுந்து விழுந்து காதல் செய்யும் ஆண்கள், நாளடைவில் காதலியை கண்டுகொள்வதே இல்லை. இதனால் பல பெண்கள் மிகவும் வருந்தமடைகின்றனர். மேலும் தங்கள் காதலனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று எண்ணி, அவர்களுடன் சண்டைகளைப் போடுகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு காதல் வந்த பின்னர், தங்களின் காதலன் மீது அன்பு அளவுக்கு அதிகமாகி, அவர்களுடனேயே இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
ஆனால் அந்த கட்டத்தில் தான் ஆண்கள், தங்கள் காதலியை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் காதலிக்கும் சில பெண்கள் காதல் வாழ்க்கையை வெறுத்து, காதலே வேண்டாம் என்று எண்ணுகின்றனர். பல பெண்கள் தினமும் மனதில் அழுது கொண்டு இருக்கின்றனர். மேலும் காதலனிடம் தங்களது பிரச்சனைகளை சொன்னாலும், அதை காதலன் புரிந்து கொள்ளாமல் நடக்கின்றனர் என்று, சில நேரங்களில் வாழ்க்கையை வெறுக்கின்றனர்.
உண்மையில் அந்த நிலையில் பெண்கள் அப்படி தவறான முடிவை எடுக்காமல், காதலிப்பதற்கு முன்பு எப்படி இருந்தீர்களோ அப்படி காதலை வெளிப்படுத்தாமல்மாறினால், பின் தானாக உங்கள் காதலன் உங்களை தேடி வருவார். இங்கு இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த உங்கள் காதலன் உங்களை தேடி வர சில ட்ரிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றி வாருங்கள். பின் பாருங்கள் உங்கள் காதலன் எப்படி உங்களின் நினைப்போடு இருக்கிறார் என்று.
கொஞ்சம் விளையாடுங்கள்
காதலில் விழுந்த பின்னர் பெண்கள், காதலன் அழைத்த உடனேயே வந்துவிடுவார்கள். ஆனால் உங்கள் காதலன் உங்களை கண்டு கொள்ளாமல் எப்போதாவது உங்களை காண அழைத்தால், அப்போது அவரை சந்திக்க செல்ல வேண்டாம். இதனால் அவர்கள் உங்கள் அதிகம் மிஸ் பண்ணுவதுடன், உங்கள் நினைப்பாகவே இருப்பார்கள். பின்னர் தான் உங்களின் அருமை அவர்களுக்கு புரியும்.
நண்பர்களுடனும் நேரம் செலவழியுங்கள்
எப்போதும் அவர்களுடனேயே நேரத்தை செலவழிக்காமல், சற்று நண்பர்களுடனும் நேரத்தை செலவழியுங்கள். ஏனெனில் வாழ்வில் நண்பர்களும் மிகவும் முக்கியமானவர்கள். எனவே மனம் கஷ்டமாக இருக்கும் தருணம், நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள். அப்படி நேரத்தை செலவழிக்கும் போது, உங்கள் காதலன் போன் செய்தால் எடுக்காதீர்கள். சொல்லப்போனால் அவர்களை கண்டு கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் தான், உங்கள் காதலனுக்கு நீங்கள் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரியும். பின்னர் என்ன, இனிமேல் உங்கள் நினைவாகவே இருப்பார்கள்.
ஆச்சரியம் கொடுங்கள்
வாழ்வில் ஆச்சரியம் இல்லாவிட்டால், வாழ்க்கை சுவாரஸ்யமாகவே செல்லாது. ஆகவே நீண்ட நாட்கள் அவர்களுடன் பேசாமல் இருந்து, பின் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் கொடுக்கலாம். உதாரணமாக, அவர்களின் சின்ன சின்ன கனவுகளை அவ்வப்போது நிறைவேற்றுவது. இவ்வாறெல்லாம் செய்தால், நீங்கள் அவர்கள் மேல் வைத்துள்ள அன்பை அவர்கள் உணர்ந்து, இனிமேல் சரியாக நடந்து கொள்வார்கள்.
எப்போதும் அழகாக இருங்கள்
தினமும் உங்கள் காதலனை கவரும் வகையிலும், அவர்களுக்கு பிடித்தவாறான அழகான ஆடைகளை அணிந்து வாருங்கள். சொல்லப்போனால், மற்ற ஆண்கள் உங்களை சைட் அடிக்கும் வண்ணம் அணிந்து வாருங்கள். இதனால் உங்கள் காதலன் 'இவள் என் காதலி' என்ற பெருமிதத்துடன், உங்களை சைட் அடித்து கொண்டிருப்பார்கள்.
சந்தோஷமாக இருங்கள்
உங்கள் காதலனிடம் சரியாக பேசாமல் இடைவெளியை மேற்கொள்ளும் போது, அவர்களின் முன்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருப்பது போல் நடந்து கொள்ளுங்கள். இதனால் இத்தனை நாட்கள் நீங்கள் பேசியதை சீரிஸாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், பின் உங்களிடம் வந்து சீரியஸாக பேசுவார்கள். அதன் பின் நீங்கள் உங்களது மனதில் உள்ளதை சொல்லுங்கள். எப்போதுமே ஒருவரின் வலியை மற்றவருக்கு சொன்னால் புரியாது, அதை அனுபவித்தால் தான் புரியும். எனவே அனுபவத்தைக் கொடுத்து, உங்களின் அருமையை புரிய வையுங்கள்.