Just In
- 47 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதை ஆண்கள் வெறுப்பதற்கான காரணங்கள்!!!
ஒரு அறையை ஆண்களால் நிரப்பி விட்டு, அவர்களில் எத்தனை பேருக்கு திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் விருப்பம் இருக்கிறது, விருப்பம் இல்லை என இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். இரண்டு பிரிவிலும் சரி சமமான எண்ணிக்கை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நகரத்தை சேர்ந்த பல ஆண்களுக்கு திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் விருப்பம் இருந்தாலும், பாரம்பரிய முறைப்படி வளர்ந்த ஆண்களுக்கு இதில் உடன்பாடு இருப்பதில்லை.
திருமணமாகாமல் வாழ்க்கை நடுத்துவதை இன்னமும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை. அதனை கையாளுவதற்கான சட்டங்களும் இன்னும் இயற்றப்படாமல் உள்ளது. மனம் ஒத்து போன ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் வாழ்க்கை நடத்தினால் சமுதாயத்தை கெடுக்கும் அவலங்களாகத் தான் பார்க்கிறது பல கிழக்கு நாடுகள். இருப்பினும் இந்த பழக்கத்தை பல மேற்கத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் பல இளைஞர்களும் திருமணமாகாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
நாம் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிகள் நாளடைவில் நமக்கு அதிக செலவையும் பிரச்சனையையும் ஏற்படுத்தி செல்ல கூடாத வழியாக மாறி விடும். திருமணமாகாமல் குடும்பம் நடத்துவதும் கூட அவ்வகை குறுக்கு வழியாக தான் பார்க்கப்படுகிறது. சாஸ்திரம், சம்பிரதாயம் என்று முறைப்படி திருமணம் செய்து காலம் முழுக்க ஒருவருடன் வாழ்வதற்கு பதில் இம்முறையை சிலர் கையாளுகின்றனர். இந்த முறையினால் கிடைக்க போகும் நீண்ட நாள் பயன்கள் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. திருமணமாகாமல் வாழ்ந்து சில பேர் திருமணமும் செய்து கொள்கின்றனர்.
திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் ஏன் சில ஆண்களுக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதை தெரிந்து கொள்வோமா?
சமூக அக்கறை
பல ஆண்களுக்கு சமூக அக்கறை இருப்பதனாலேயே அவர்களுக்கும் திருமணம் ஆகாமல் குடும்பம் நடத்தும் பழகத்தும் ஏணி வைத்தாலும் எட்டுவதில்லை. இந்தியாவில் உள்ள நகரங்களில் இந்த முறை இப்போது பிரபலம் அடைந்து வந்தாலும் கூட நம் சமுதாயம் அதனை திறந்த மனதுடன் வரவேற்கவில்லை. அதனை இன்னமும் ஒரு சமுதாய சீர்கேடாக தான் பலரும் பார்க்கின்றனர்; முக்கியமாக முதியவர்கள். அவ்வகை ஜோடிகள் சமுதாய அவலங்களாகத் தான் பார்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் பல இடங்களில் ஏசப்பட்டு அவமானங்களுக்கு உள்ளாகின்றனர்.
சுலபமாக வெளியேறி விடலாம்
திருமணமாகாமல் வாழ்க்கை நடத்துவதில் உள்ள பெரிய பயனே அதற்கு எதிர்மறையான பயனாக உள்ளது - அது தான் உறவின் மீதுள்ள பொறுப்பும் உறுதியும். சின்ன சண்டை, ஒத்துப்போகாமை அல்லது தவறான கேள்விகளால் ஒருவரை விட்டு ஒருவர் சுலபமாக பிரிந்து சென்று விடுவார்கள். ஆனால் இதுவே அவர்கள் திருமணமானவர்கள் என்றால் தங்களின் உறவை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் முடிந்த வரை போராடுவார்கள் அல்லவா? பிரச்சனைகளுக்கு தீர்வினை கண்டுபிடித்து மனஸ்தாபங்களை தீர்க்க முற்படுவார்கள்.
குழந்தைகள்
திருமணமாகாமல் வாழ்க்கை நடுத்துவதால் பிறக்கும் குழந்தைகள் தான் இந்த உறவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முதலில், ஒழுக்கம் மற்றும் விதிமுறைகளின் மீது அவர்களுக்கு மதிப்பென்பதே இல்லாமல் போய் விடும். சேர்ந்து அல்லது பிரிந்து இருக்கும் அந்த தம்பதிகளிடம் இருந்து அந்த குழந்தைகளுக்கு போதிய அன்பும் கவனிப்பும் கிடைக்காமல் போவதால் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள். இப்படி தங்கள் குழந்தை வளருவதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை. அதனால் தான் என்னவோ திருமணமாகாமல் குடும்பம் நடத்துவதில் அவர்களுக்கு நாட்டம் இருப்பதில்லை.
தோள் கொடுக்க துணை இருப்பதில்லை
கணவன்/மனைவியை சார்ந்து இருக்கும் அளவுக்கு திருமணமாகாமல் உடனிருக்கும் ஆணையோ/பெண்ணையோ சார்ந்து இருக்க முடியாது. சில நேரங்களில் உங்களுக்காக அவர்கள் தோள் கொடுக்க தான் செய்வார்கள். ஆனால் நீங்கள் கஷ்டப்படும் காலங்களில் இதனை எதிர்பார்க்க முடியாது. திருமண பந்தத்தில் உள்ள ஆழம் இதில் இருப்பதில்லை. இவ்வகை உறவில் ஒரு கமிட்மெண்ட் இல்லாததால் கஷ்ட காலங்களில் அவர்கள் உங்களை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மரியாதை இருப்பதில்லை
திருமண பந்தத்துடன் ஒப்பிடுகையில் திருமணமாகாமல் வாழ்க்கை நடத்தும் உறவு நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா என்பது சந்தேகமே. அதனால் இவ்வகை உறவில் ஆயுளை தீர்மானிக்க முடியாது. அதனால் தான் என்னவோ இந்த உறவில் ஈடுபடுபவர்கள் ஒருவரை ஒருவர் அதிக அளவில் மதிப்பதில்லை. அவர்களின் உறவு நுனியில் இருப்பதால் அது எப்போது வேண்டுமானாலும் உடையலாம்.