Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 5 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
நோய்வாய்ப்பட்ட கணவனை, அதோகதியில் விட்டு சென்ற 4 மனைவிகள்!
வாழ்க்கையின் உண்மையை அறிந்து, எது நம்முடன் கடைசிவரை தங்கும், எது தற்காலிகமானது என்பதை தெளிந்த அறிவுடன் அறிந்து, நல்ல முறையில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்கார வியாபாரி இருந்தான். அந்த வியாபாரிக்கு நான்கு மனைவிகள். அவனது முதல் மனைவி தான் உண்மையான வாழ்க்கை துணையாகவும், அவனது தொழில் மற்றும் சொத்துகளையும் பேணிக்காத்து வந்தால். அவள் தனது கணவனை மிகவும் நேசித்த போதிலும், அவன், மற்ற மனைவிகளை தான் விரும்பினான்.
ஒரு நாள் அந்த வணிகன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரண படுக்கைக்கு தள்ளப்பட்டான். அந்த நேரத்தில், தனது ஆசைக்கும், விருப்பத்திற்குமான கடைசி மனைவியை தன்னுடன் தங்கியிருக்க கூறினான்.....
நான்காம் மனைவியின் பதில்...
"நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது.." என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். நான்காவது மனைவியின் பதில் அந்த வியாபாரியை மிகவும் மன வருத்தம் அடைய செய்தது.
மூன்றாவது மனைவியின் பதில்...
பிறகு அந்த வியாபாரி தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்....
அதற்கு அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். இதை கேட்டதும் மரண படுக்கையில் இருந்த வியாபாரியின் மனம் உடைந்தே போனது.
இரண்டாவது மனைவியின் பதில்...
பிறகு அந்த வியாபாரி தனது இரண்டாவது மனைவியை அழைத்தான்....
அதற்கு அவள், "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்" என கூறி கணவனை அம்போவென விட்டுப் சென்றுவிட்டாள். இந்த பதிலை வியாபாரியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
முதல் மனைவியின் பதில்...
மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்த வியாபாரியை கண்டு முதல் மனைவி...
"நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என கூறு ஆறுதலாக பேசினால். ஆனால், முதல் மனைவியோ, உணவு குறைபாட்டால் மெலிந்து காணப்பட்டாள். வியாபாரி, "நான் நன்றாக இருந்த சமயம், உன்னைக் கவனித்திருக்க வேண்டும்.." என கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தினான்.
யார் இந்த நான்கு மனைவிகள்?
இந்த கதையில் வரும் வணிகனை போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
நான்காம் மனைவி:
நம்முடைய உடல் அழகு . அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது.
மூன்றாம் மனைவி:
நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
இரண்டாம் மனைவி:
என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
முதல் மனைவி:
நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
யோசிங்க!
எனவே, வாழ்க்கையின் உண்மையை அறிந்து, எது நம்முடன் கடைசிவரை தங்கும், எது தற்காலிகமானது என்பதை தெளிந்த அறிவுடன் அறிந்து, நல்ல முறையில் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.