Just In
- 14 min ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 5 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நண்பர்கள் தின ஸ்பெஷல் ஸ்டோரி: பள்ளி நண்பர்களே என்றும் மறக்க முடியாத நண்பர்கள்!!!
நண்பர்கள் இல்லாதோர் இல்லாதோர், இவ்வுலகில் எவரும் இலர். இந்த உலகில் உள்ள மிகவும் புனிதமான ஒரு உறவு தான் நண்பர்கள். இத்தகைய நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் அமைவார்கள். ஆனால் சிறு வயதில், அதிலும் பள்ளியில் படிக்கும் போது வரும் நண்பர்கள் என்றுமே மறக்க முடியாத நண்பர்களாகளே மனதில் இருப்பார்கள். பள்ளிக்கு பிறகு காலேஜில் எத்தனை நண்பர்கள் கிடைத்தாலும், இவர்களுக்கு நிகர் எவரும் இருக்க முடியாது.
இதற்கு காரணம் பல இருக்கலாம். ஏனெனில் சிறு வயதில் அனைவருமே பள்ளியில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யக்கூடாத அட்டகாசங்களை செய்து, ஆசிரியரிடம் பல அடிகளை வாங்கியிருப்போம். மேலும் டெஸ்ட் என்று வந்தால், புத்தகத்தை எடுத்து படிக்கிறோமோ இல்லையோ, நண்பர்களுடன் சேர்ந்து நன்கு பிட் அடித்திருப்போம். அதுமட்டுமின்றி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, தூக்கம் வந்தால், நண்பர்களிடம் சொல்லிவிட்டு, பெஞ்ச்சுக்கு அடியில் எத்தனை பேர் படுத்திருப்போம். இத்தகைய சேட்டைகள் அனைத்தும் காலேஜ் வருடங்களான 2-3 வருடங்கள் மட்டுமா நடந்திருக்கும். இல்லை, இவை அனைத்தும் 12 வருட கால நிகழ்வுகள்.
அதுமட்டுமல்லாமல், பள்ளிப் பருவத்தில் கோபத்தினால் அடிக்கடி நண்பர்களுடன் சண்டைகள் போட்டுக் கொள்வோம். அதிலும் அவை அனைத்து சிறு காரணங்களாக இருக்கும். அப்போது ஈகோ என்ற ஒன்று அறவே இருக்காது. மேலும் எதையும் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்துக் கொள்ளுமாறும் சண்டைகள் இருக்காது. அதிலும் அத்தகைய சண்டைகளை இன்று நினைத்தாலும், அந்த நண்பர்கள் மீது கோபம் வராது, மனதில் ஒருவித ஆனந்த புன்னகை மற்றும் மீண்டும் அவர்களைப் பார்த்தால், அந்த சிறு காரணத்திற்காக சிறு செல்ல சண்டைகள் போட வேண்டுமென்று தோன்றும்.
ஒரு சிலர் சிறுவயதில் அவ்வப்போது பள்ளிகளை மாற்றினாலும், அத்தகையவர்களுக்கும் மேற்கூறிய பள்ளிப் பருவ நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்திருக்கும். சொல்லப்போனால், அத்தகையவர்களுக்குத் தான் இன்னும் நிறைய நண்பர்கள் மறக்க முடியாதவர்களாய் இருப்பார்கள்.
இதுப்போன்று பள்ளிப் பருவத்தில் கிடைத்த நண்பர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளை படிக்கும் போது, நிச்சயம் அனைவருக்கும் அவரவர்களது பள்ளிப் பருவத்தில் நண்பர்களுடன் செய்த சேட்டைகள் அனைத்தும் ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன். என்ன நண்பர்களே சரிதானே!
சரி, நீங்கள் பள்ளிப் பருவத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து, என்றும் மறக்க முடியாதவாறு செய்த சேட்டையை எங்களுடனும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!