Just In
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 1 hr ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 2 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- 3 hrs ago வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
Don't Miss
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தஞ்சாவூர் கதம்ப சாதம்
தஞ்சாவூர் என்றால் நினைவிற்கு வருவது தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் தஞ்சாவூரில் ரெசிபி ஒன்றும் மிகவும் பிரபலமானது. அது தான் தஞ்சாவூர் கதம்ப சாதம். இந்த கதம்ப சாதமானது ஐயர் வீடுகளில் அதிகம் செய்யப்படும். இந்த கதம்ப சாதத்தை உங்கள் வீடுகளில் செய்ய ஆசைப்பட்டால் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு தஞ்சாவூர் கதம்ப சாதத்தின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி
-
1
கப்
(நீரில்
கழுவி
வைத்தது)
கெட்டியான
தேங்காய்
பால்
-
1
கப்
தேங்காய்
பால்
-
1
மற்றும்
1/2
கப்
(வெதுவெதுப்பான
நீர்
சேர்த்தது)
கிராம்பு
-
4
ஏலக்காய்
-
2
முந்திரி
-
100
கிராம்
காய்கறிகள்
-
1
கப்
(பீன்ஸ்,
மொச்சை,
கத்திரிக்காய்,
கேரட்,
சௌசௌ,
முருங்கைக்காய்)
பச்சை
மிளகாய்
-
1
நெய்
-
தேவையான
அளவு
உப்பு
-
தேவையான
அளவு
வறுத்து அரைப்பதற்கு...
கடலைப்
பருப்பு
-
1
டேபிள்
ஸ்பூன்
வரமிளகாய்
-
4
மல்லி
-
1
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் மல்லி ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் கிராம்பு, ஏலக்காய் சேர்தது தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் காய்கறிகள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு அதில் அரிசியை சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்த தேங்காய் பாலை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட வேண்டும்.
பின் குக்கரை திறந்து, அதில் கெட்டியான தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி 15 நிமிடம் கழித்து திறந்து, சிறிது நெய் சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், தஞ்சாவூர் கதம்ப சாதம் ரெடி!!!
Image Courtesy: simpleindianrecipes