Just In
- 3 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 46 min ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சுண்டக்காய் வத்தக்குழம்பு
மதியம் எப்போதும் காய்கறிகளைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சுண்டக்காய் வற்றல் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். அதிலும் வெள்ளை சாதத்துடன் இதனை போட்டு பிசைந்து, அப்பளத்துடன் சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
சரி, இப்போது அந்த சுண்டக்காய் வத்தக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்
-
1/4
கப்
காய்ந்த
சுண்டக்காய்
-
3
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1
டீஸ்பூன்
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
பெருங்காயத்
தூள்
-
1
சிட்டிகை
கறிவேப்பிலை
-
சிறிது
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
பூண்டு
-
10
பற்கள்
(தோலுரித்தது)
மிளகாய்
தூள்
-
1
டேபிள்
ஸ்பூன்
மல்லித்
தூள்
-
3
டேபிள்
ஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
உப்ப
-
தேவையான
அளவு
நாட்டுச்சர்க்கரை
-
1
டேபிள்
ஸ்பூன்
புளி
-
1
எலுமிச்சை
அளவு
தண்ணீர்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் கையால் பிசைந்து, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலி அல்லது மண் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த சுண்டக்காயை போட்டு மொறுமொறுவென்று வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் புளிச்சாறு, மசாலாப் பொடிகள், உப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் வறுத்து வைத்துள் சுண்டக்காயை சேர்த்து, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!