Just In
- 1 hr ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 10 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹோலிப் பண்டிகைக்கு 'ஸ்வீட் சமோசா'!
தேவையானப் பொருட்கள்
மைதாமாவு
-
கால்
கிலோ
தேங்காய்
–
1
வெல்லம்
–
கால்
கிலோ
எண்ணெய்
–
பொரிக்க
தேவையான
அளவு
ஏலக்காய்
பொடி
–
2
டீ
ஸ்பூன்
செய்முறை
மைதா மாவினை தண்ணீர் விட்டு பூரிக்கு பிசைவது போன்ற பக்குவத்தில் கெட்டியாகப் பிசைந்து ஊறவைத்துக் கொள்ளவும்.
தேங்காய் பூரணம்
தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு கரண்டி தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் தேங்காய் துருவலை அதில் போட்டு நன்றாகக் கிளறவும், தண்ணீர் வற்றி, பூரணம் சுருண்டு வந்ததும் வாணலியை இறக்கி வைத்து ஏலாக்காயை பொடி செய்து போட்டு கலக்கவும். தேங்காய் பூரணம் நன்றாக ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவை நன்கு பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு உருண்டையை இரண்டு கை விரல்களாலும் அழுத்தி சிறிய வட்டமாக்கவும். நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடி கொழுக்கட்டை வடிவம் போல் செய்யவும். இதே போல எல்லா உருண்டைகளையும் பூரணம் வைத்து இனிப்பு சமோசா போலச் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை நான்கு நான்காக போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதே போல எல்லாக் இனிப்பு சமோசாக்களையும் செய்யவும். குழந்தைகள் இந்த சமோசாவை விரும்பி சாப்பிடுவர். வெல்லம், தேங்காய் பூரணம் என்பதால் பெரியவர்களும் சாப்பிடலாம்.
தேங்காய்
பூரணத்துக்குப்
பதிலாக
கடலைப்
பூரணம்
வைத்தும்
இனிப்பு
சமோசா
செய்யலாம்.