Just In
- 1 min ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 29 min ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 2 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 3 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சிம்பிளான... பாலக் பன்னீர் ரெசிபி
உங்கள் குழந்தைகள் கீரை சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? அப்படியெனில் அவர்களுக்கு கீரையை வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுங்கள். குறிப்பாக இரவில் சப்பாத்தி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக பாலக் பன்னீர் செய்து கொடுங்கள்.
இது உங்கள் குழந்தை விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, அலுவலகம் முடிந்து களைப்புடன் வீட்டிற்கு வரும் உங்கள் துணைக்கும் நல்ல விருந்து கொடுத்தது போன்று இருக்கும். சரி, இப்போது அந்த பாலக் பன்னீரை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர்
-
250
கிராம்
எண்ணெய்
-
2-3
டேபிள்
ஸ்பூன்
நறுக்கிய
இஞ்சி,
பூண்டு
-
2
டேபிள்
ஸ்பூன்
வெங்காயம்
-
2
(நறுக்கியது)
தக்காளி
-
2
(நறுக்கியது)
பசலைக்
கீரை
-
2
கட்டு
வெந்தயக்
கீரை
-
1/2
கப்
பச்சை
மிளகாய்
-
4-5
கொத்தமல்லி
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
சீரகம்
-
1/2
டீஸ்பூன்
மல்லித்
தூள்
-
1
டேபிள்
ஸ்பூன்
கரம்
மசாலா
-
1
டீஸ்பூன்
தயிர்
-
3-4
டேபிள்
ஸ்பூன்
பிரஷ்
க்ரீம்
-
3-4
டேபிள்
ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் அதில் பசலைக்கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள கீரையை சேர்த்து, அத்துடன் உப்பு, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் தயிர், க்ரீம் சேர்த்து கிளறி, பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து மெதுவாக பிரட்டி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், பாலக் பன்னீர் ரெடி!!!