Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரவை தேங்காய் உப்புமா
அலுவலகம் செல்லும் போது காலையில் மிகவும் ஈஸியாக செய்து முடிக்கக்கூடியவாறான ரெசிபியைத் தான் செய்ய விரும்புவோம். அப்படி காலை வேளையில் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் உப்புமா. பொதுவாக உப்புமா செய்ய அனைவருக்குமே தெரியும். ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரவை தேங்காய் உப்புமாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அது தேங்காய் பால் பயன்படுத்தி செய்வது தான்.
சரி, இப்போது அந்த ரவை தேங்காய் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ரவை
-
1
கப்
கடுகு
-
1/2
டீஸ்பூன்
உளுத்தம்
பருப்பு
-
1
டீஸ்பூன்
கடலைப்
பருப்பு
-
1
டீஸ்பூன்
வரமிளகாய்
-
2
கறிவேப்பிலை
-
சிறிது
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2
துருவிய
தேங்காய்
-
2
டேபிள்
ஸ்பூன்
நெய்
-
2
டீஸ்பூன்
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
தண்ணீர்
-
1/2
கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு தேங்காயை மிக்ஸியில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி அரைத்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, அந்த தேங்காய் பாலை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் வறுத்து வைத்துள்ள ரவையை வாணலியில் சேர்த்து, நெய் ஊற்றி ஒருமுறை கிளறி, மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
எப்போது வாணலியில் உள்ள நீரானது முற்றிலும் வற்றுகிறதோ, அப்போது வாணலியை அடுப்பில் இருந்து இறக்கினால், ரவை தேங்காய் உப்புமா ரெடி!!!