Just In
- 15 min ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 52 min ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 1 hr ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- 1 hr ago கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
Don't Miss
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Movies Baakiyalakshmi: ஐயய்யோ.. கர்ப்பமா.. ஏன் இப்படி பண்ணினே.. ராதிகாவிடம் கோபி கேட்ட கேள்வி!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நூல்கோல் குழம்பு
பலருக்கும் நூல்கோலை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக நூல்கோலைக் கொண்டு எப்படி குழம்பு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
சரி, இப்போது அந்த நூல்கோல் குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நூல்கோல்
-
4
மிளகுத்
தூள்
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
மஞ்சள்
தூள்
-
1
டீஸ்பூன்
தண்ணீர்
-
தேவையான
அளவு
தயிர்
-
1/2
கப்
அரைப்பதற்கு...
துருவிய
தேங்காய்
-
1
கப்
சீரகம்
-
1
டீஸ்பூன்
பச்சை
மிளகாய்
-
1
மஞ்சள்
தூள்
-
1/2
டீஸ்பூன்
அரிசி
மாவு
-
2
டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
தேங்காய்
எண்ணெய்
-
1
டேபிள்
ஸ்பூன்
கடுகு
-
1
டீஸ்பூன்
வெந்தயம்
-
1/4
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
வரமிளகாய்
-
1
செய்முறை:
முதலில் நூல்கோலின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நூல்கோலை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
அதற்கு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
நூல்கோல் நன்கு வெந்ததும், அதில் தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் ஒரு சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறி இறக்கினால், நூல்கோல் குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi