Just In
- 4 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 6 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 6 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 7 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அருமையான... நீர் தோசை
பெரும்பாலும் தென்னிந்திய உணவுகளில் தோசை மிகவும் பிரபலமானது. மேலும் அத்தகைய தோசையில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதிலும் குழந்தைகளுக்கு தான் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். குறிப்பாக தோசை மொறுமொறுவென்று இருந்தால், நிறைய தோசை வயிற்றுக்குள் போகும். அத்தகைவாறு செய்யும் தோசைகளில், சாதாரணமாகவே தோசை சுடும் போதே மொறுமொறுவென்று இருக்கும் தோசை என்று சொன்னால, அது நீர் தோசை தான்.
இந்த நீர் தோசை செய்வது மிகவும் சுலபமானது. ஏனெனில் இந்த தோசை சுடும் மாவை, எப்போது அரைக்கிறோமோ, அரைத்தப் பின்பு அரை மணிநேரம் கழித்து தோசை சுட்டால் போதும். சரி, இப்போது அந்த நீர் தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
-
2
கப்
(இரவில்
ஊற
வைத்தது)
தேங்காய்
-
1
கப்
(துருவியது)
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
தண்ணீர்
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு கழுவ வேண்டும்.
பின்னர் கிரைண்டரில் அரிசியைப் போட்டு, தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு நைஸாக அரைக்க வேண்டும். பிறகு அதனை ஒரு மணிநேரம் தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு அதில் உப்பு மற்றம் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தேய்த்து சூடேற்ற வேண்டும்.
கல்லானது சூடேறியதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை வட்டமாக ஊற்ற வேண்டும்.
பின்னர் அதில் எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென்று வந்ததும், பரிமாறலாம்.
இந்த நீர் தோசையை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
குறிப்பு:
இந்த நீர் தோசையானது, மற்ற தோசையை விட சற்று வித்தியாசமானது. எப்படியெனில் மற்ற தோசைகளில், கல்லில் தோசை மாவை ஊற்றி, வட்டமாக தேய்க்க வேண்டும். ஆனால் இந்த தோசையில் தோசை மாவையே வட்டமாக ஊற்ற வேண்டும். மேலும் இதனை முன்னும், பின்னும் திருப்பிப் போட்டு சுடத் தேவையில்லை.