Just In
- 6 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காளான் குழம்பு
அக்டோபர் மாதத்தில் காளான் அதிகம் கிடைக்கும். ஆகவே அத்தகைய காளானை முடிந்த வரையில் அதிகம் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் காளானில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்டோபர் மாதத்தில் காளான் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால், காளானை வைத்து பல்வேறு ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம்.
அதிலும் காளான் சூப், காளான் மசாலா, காளான் குழம்பு என்று பலவாறு காளானை சமைத்து சாப்பிடலாம். இப்போது அதில் காளான் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பட்டன்
காளான்
-
200
கிராம்
(நறுக்கியது)
வெங்காயம்
-
1
கப்
(நறுக்கியது)
தக்காளி
-
3/4
கப்
(நறுக்கியது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1
டேபிள்
ஸ்பூன்
மல்லி
தூள்
-
2
டேபிள்
ஸ்பூன்
கரம்
மசாலா
-
1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
தேங்காய்
-
3
டேபிள்
ஸ்பூன்
(அரைத்தது)
கொத்தமல்லி
-
சிறிது
உப்பு
-
தேவையான
அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய்
-
4
டேபிள்
ஸ்பூன்
கிராம்பு
-
2
பட்டை
-
1
இன்ச்
செய்முறை:
முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து, தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு காளான், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காளான் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்னர் தேங்காயை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சூப்பரான காளான குழம்பு ரெடி!!! இதனை சாதம், சப்பாத்தி, புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.