Just In
- 18 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 51 min ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 54 min ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெந்தய இட்லி ரெசிபி
வெந்தய இட்லியானது மிகவும் அருமையான, அதே சமயம் மிகவும் ஆரோக்கியமான காலை உணவும் கூட. இது ஒரு கர்நாடக ரெசிபி. இதனை காலையில் உட்கொண்டால், அது உடலுக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுத்து, நாள் முழுவதும் நன்கு செயல்பட உதவியாக இருக்கும்.
மேலும் எப்போதும் அரிசி இட்லியை செய்து சாப்பிட்டு போர் அடித்தவர்கள், இந்த வெந்தய இட்லியை முயற்சி செய்யுங்கள். சரி, இப்போது அந்த வெந்தய இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி
-
1
கப்
தேங்காய்
-
1
கப்
(துருவியது)
வெந்தயம்
-
1
டீஸ்பூன்
தயிர்
-
4
டேபிள்
ஸ்பூன்
வெல்லம்
-
3
டேபிள்
ஸ்பூன்
(பொடியாக
தட்டியது)
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் போட்டு, குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மற்றொரு பௌலில் வெந்தயத்தைப் போட்டு தயிர் ஊற்றி, கரண்டி கொண்டு நன்கு கலந்து, இதையும் 6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஆறு மணிநேரம் ஊற வைத்தப் பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய் மற்றும் ஊற வைத்துள்ள வெந்தயக் கலவையை போட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள அரிசியை நன்கு அரைத்து, அதனை அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையில் சேர்த்து, நன்கு கலந்து, பின் வெல்லத்தை சேர்த்து நன்கு கரண்டி கொண்டு கலந்து, மாவை நொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு பொங்கி வந்த பின்னர், அதில் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான வெந்தய இட்லி ரெடி!!! இதனை தக்காளி மற்றும் வெங்காய சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.