Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா
ஹிந்தியில் பிந்தி என்றால் தமிழில் வெண்டைக்காய் என்று அர்த்தம். அத்தகைய வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆகவே பலரும் இதனை விரும்பி அதிகம் சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். அந்த அளவில் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
இத்தகைய வெண்டைக்காயை பலரும் குழம்பு, சாம்பார், மசாலா என்று செய்வார்கள். இப்போது இவற்றில் கடாய் வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அது என்ன கடாய் வெண்டைக்காய் மசாலா என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, இதனை கடாயில் செய்வதால் தான், இதற்கு கடாய் மசாலா என்ற பெயர் வந்தது. சரி, செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்
-
12
வெங்காயம்
-
1
(நறுக்கியது)
குடைமிளகாய்
-
1
(நறுக்கியது)
தக்காளி
-
1
(அரைத்தது)
இஞ்சி
பூண்டு
பேஸ்ட்
-
1
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1/2
டீஸ்பூன்
மல்லி
தூள்
-
2
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1
டீஸ்பூன்
முந்திரி
-
5
சீரகம்
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
எண்ணெய்
-
தேவையான
அளவு
தண்ணீர்
-
1
கப்
செய்முறை:
வெண்டைக்காயை கழுவி, துணியால் துடைத்து, ஓரளவு நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து, வெண்டைக்காயை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வெண்டைக்காய் வதக்கிய அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சீரகத்தை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, உப்பு சேர்த்த 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்னர் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து, மற்றொரு 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கடாய் பிந்தி/வெண்டைக்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சாப்பாத்தியுடன் சாப்பிடலாம்.